காலையில் ஒரு பெண்… இரவில் ஒரு பெண்… பிரபல இசையமைப்பாளரை கழுவி ஊத்திய பயில்வான் ரங்கநாதன்!...

Music Director: தமிழ் சினிமாவில் இப்போது சர்ச்சை காலம் போல எங்கு திரும்பினாலும் ஒரு பிரச்னை குறித்து பேசிக்கொண்டே இருக்கின்றனர். அப்படி இசையுலகில் நிலவிக்கொண்டு இருப்பது சங்க தலைவர் தேர்தல் தான். அதில் முன்னாள் தலைவரான தீனா குறித்து பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இசை கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த வருடமே நடக்க இருந்தது. ஆனால் சபேசன் தொடுத்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் புதிய விதிகள் ஒப்புதல் வாங்கும் வரை தேர்தலை நடத்த கூடாது என தடை விதித்தார்கள். அப்படி காலம் கடந்த தேர்தல் நேற்று முடிந்தது. இதில் முன்னாள் தலைவரான தீனாவை எதிர்த்து போட்டியிட்ட தேவாவின் தம்பியும், இசையமைப்பாளருமான சபேசன் தலைவராக வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க: பாக்யராஜால் பள்ளியை விட்டே வெளியேறிய பானுப்பிரியா… அதன்பின் என்ன நடந்ததுன்னு தெரியுமா?

ஏற்கனவே தலைவராக இருந்தவர்கள் மீண்டும் போட்டியிட கூடாது. இதை மீறி தீனா போட்டியில் நிற்க கங்கை அமரன் அவரை மோசமாக விமர்சித்து இருந்தார். 80 லட்ச ரூபாய் மோசடியில் தங்கள் வீட்டு பெண் பவதாரிணியின் கையெழுத்தும் இருப்பதாக கூறி இருந்தார். இந்த விஷயம் மிகவும் பரபரப்பானது.

அதை தொடர்ந்து இளையராஜாவும் தீனா குறித்து பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தீனா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் இருந்து, சிலருக்கு பதவி ஆசை போகவே போகாது. அப்படி ஒரு ஆள் தான் தீனா. அதனால் தான் மீண்டும் போட்டியிட்டார்.

இதையும் படிங்க: உற்சாகத்தில் இளையராஜா போட்ட மெட்டு…. இன்று வரை அதை முறியடிக்க பாடலே இல்லை…!

ஏற்கனவே சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுப்பட்டு இருக்கிறார். சங்க கட்டிடம் கட்ட இளையராஜா பெரிய தொகை கொடுப்பதாக இருந்தார். ஆனால் தீனாவின் குணம் சரியில்லை என்பதால் அதை அவர் கொடுக்கவில்லை. தீனாவை கங்கை அமரன் கூட காரி துப்பி இருக்கிறார். இதை கேட்ட பிறகு அவர் பதவியே வேண்டாம் என போக வேண்டும்.

ஆனால் இருந்தும் போட்டியிட்டதுக்கு காரணம் அவரின் தில்லுமுல்லு வெளியில் தெரிந்து விடும் என்பதற்கு தான். சினிமா வாழ்க்கையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் தீனா மோசமான ஆள் தான். அவனிடம் வீணை வாசிக்க வந்த பெண்ணை மடக்கி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகளும் மகனும் இருக்கின்றனர். ஆனால் குடும்பத்தை அவர் சரியாக பார்த்துக் கொள்ளாததால் அந்தப் பெண் தீனாவிடம் இருந்து விலகினார்.

அதைத் தொடர்ந்தும் சும்மா இருக்காதவர் தன்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த ஒரு இஸ்லாமிய பெண்ணையும், இன்னொரு பெண்ணையும் மடக்கி தன்னுடன் வைத்திருக்கிறார். காலையில் ஒரு பெண்ணுடனும், இரவில் ஒரு பெண்ணுருடனும் வாழ்ந்து வருகிறார். அந்தப் பெண்களும் வேறு வழியில்லாமல் தீனா உடனே இருக்கின்றனர். பொம்பள விஷயத்தில் மோசம் எனவும் குறிப்பிட்டார்.

 

Related Articles

Next Story