Connect with us

Cinema News

26 வயசு இளம் நடிகை தற்கொலை.. அவர்தான் காரணமா? பற்ற வைத்த பயில்வான் ரங்கநாதன்!

26 வயதே ஆன இளம் நடிகை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு யார் காரணமாக இருக்கும் என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ள புதிய வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

வாய்தா படத்தில் நடித்த தீபா என்கிற பவுலின் தனது வீட்டில் தூக்கிட்டு கடந்த ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டார். அந்த வழக்கு விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறதாம்.

இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் நடிப்பில் ‘வாய்தா திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப்படத்தில் நடிகை தீபா என்கிற பவுலின் ஜெஸ்ஸிகா நாயகியாக அறிமுகமானார். இளம் நடிகையாக சினிமாவில் சாதிக்க வேண்டும் என சென்னைக்கு வந்து தனியாக வாடகை வீட்டில் தங்கியிருந்த அவர், விஷாலின் ‘துப்பறிவாளன்’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

தற்கொலை செய்து கொண்ட இளம் நடிகை:

இந்நிலையில் சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவின்யூவில் உள்ள தனது வீட்டில் நடிகை தீபா என்கிற பவுலின் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டது. தன்னுடன் இணைந்து நடித்த சிராஜுதின் என்கிற நடிகருடன் அவர் காதலில் விழுந்தார் என்றும் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்ததாதாகவும் பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் கூறியுள்ளார் .

மரணத்துக்கு யார் காரணம்:

நடிகை பவுலின் மரணத்துக்கு யாருமே காரணமில்லை என குறிப்பிட்டுள்ள நிலையில், இன்னொரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தைகள் எல்லாம் இருந்தும் கள்ளத் தொடர்பில் இந்த இளம் நடிகையுடன் இருந்த சிராஜுதினுக்கு எந்தவொரு சிக்கலும் வராது என கூறிய பயில்வான் ரங்கநாதன், அதே குடியிருப்பில் ஜெசிகா பவுலினுக்கு சினிமா சான்ஸ் வாங்கிக் கொடுத்த நண்பர் பிரபாகரன் பற்றிய எந்தவொரு தடையும் தெரியவில்லை என புதுசாக கொக்கி ஒன்றையும் போட்டிருக்கிறார்.

சீரழியும் இளம் நடிகைகள்:

ஒரு தலை காதல் காரணமாக தீபா எனும் பவுலின் அவரே தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில், ஆந்திராவில் உள்ள பவுலினின் பெற்றோர்களும் சிராஜுதின் மற்றும் பிரபாகரன் மீது எந்தவொரு புகாரும் அளிக்கவில்லை என்றும் இளம் நடிகைகள் பலர் இப்படி சினிமா வாழ்க்கைக்காக சொந்த ஊர் விட்டு சென்னைக்கு வந்து காதல் வலையில் விழுந்து சீரழிந்து போகின்றனர் எனக் கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top