More
Categories: Cinema News latest news

நடு ராத்திரியில் கேட்ட அலறல் சத்தம்… வடிவேலு செய்த செயலால் நடிகைக்கு நேர்ந்த சோகம்… அடக்கொடுமையே!!

தமிழின் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வரும் வடிவேலு, மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து தனது திறமை மூலமாக முன்னேறி வந்தவர். நாகேஷ், கவுண்டமணி, செந்தில் என தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் வரிசையில் வடிவேலு ஒரு முக்கியமான இடத்தை பிடித்தவர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரையும் தனது நகைச்சுவையால் வயிறு குலுங்க சிரிக்க வைத்து வரும் வடிவேலு, தமிழ் மக்களிடையே ஒன்றிப்போன நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார்.

Advertising
Advertising

Vadivelu

சினிமாவில் மிகவும் போராடி தன் நிலையை உயர்த்திக்கொண்ட வடிவேலு, தனக்கு ஜோடியாக யார் நடிக்க வேண்டும், யார் நடிக்கக்கூடாது என முடிவெடுக்கத் தொடங்கினார். இந்த நிலையில் வடிவேலு சக நடிகையுடன் மிகவும் மோசமாக நடந்துகொண்டதாக ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார், நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன்.

“சந்திரமுகி படத்தில் இயக்குனர் பி.வாசு வேறு ஒரு நடிகையை வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என்றார். ஆனால் வடிவேலு தனக்கு சொர்ணா என்ற நடிகைதான் வேண்டும் என கேட்டார். அதே போல் குசேலன் படத்தில் கவர்ச்சி நடிகை சோனாவை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என்றார் வடிவேலு. ஆனால் சோனாவுக்கு சும்மா ஒன்றும் வாய்ப்பு வழங்கவில்லை. எல்லாத்தையும் ‘வாங்கிட்டுத்தான்’! வாய்ப்பு கொடுத்தார் வடிவேலு” என பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: அதளபாதாளத்திற்குச் சென்ற ஏவிஎம் நிறுவனம்… கரம் கொடுத்து கரை ஏற்றிய அந்த பிரபல தயாரிப்பாளர்!!

Vadivelu and Bayilvan Ranganathan

மேலும் பேசிய அவர் “தமிழின் மூத்த நடிகையாக திகழும் அம்பிகா, வடிவேலுவிடம் கெஞ்சி கூத்தாடி அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்த சமயத்தில் அம்பிகாவுடன் இன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வடிவேலு வாய்ப்பு கொடுத்தார் என்று கிசுகிசுக்கள் வந்தன. அதே போல் கோவை சரளாவையும் வடிவேலு திருப்திப்படுத்தச் சொன்னார்.” எனவும் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

“சுருளிராஜனின் மகளை ஒரு படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக போட்டார்கள். அந்த பெண்ணுக்கு அப்போது 16 வயதுதான். அந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்தது. ராத்திரி இரண்டு மணிக்கு அந்த நடிகை குய்யோ முய்யோ என்று சத்தம் போட்டார். உடனே பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு அந்த பெண்ணை கூப்பிட்டுச் சென்று ரகசிய இடத்தில் தையல் போட்டார்கள். அதற்கு காரணம் வடிவேலுதான். சமயத்தில் இது போல் வெறித்தனமாகவும் வடிவேலு நடந்துகொள்வார்” என அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் ஒரு திடுக்கிடும் தகவலை கூறியிருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Arun Prasad

Recent Posts