Categories: latest news

ஷங்கரின் முதல் படம் ‘ஜெண்டில்மேன்’ இல்ல! இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு சீக்ரெட்

Gentleman movie:இன்று தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயருக்கு சொந்தமானவர் இயக்குனர் சங்கர். எஸ் கே சந்திரசேகர் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சங்கர் ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு பல படங்களுக்கு உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.

ஒரு சமயம் எஸ் கே சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறும்போது  ‘என்னிடமிருந்து உதவி இயக்குனர்களாக இருந்த அனைவரும் படம் பண்ண போகிறேன் என ஓடி விட்டார்கள். ஆனால் சங்கர் மட்டும் கிட்டத்தட்ட என்னுடன் சேர்ந்து 18 படங்கள் பணியாற்றினார். நானும் எத்தனையோ முறை நீ தனியாக போய் படம் பண்ண வேண்டியதுதானே என கேட்டிருக்கிறேன். ஆனால் என்னை விட்டு அவ்வளவு சீக்கிரம் அவர் போகவில்லை. அதன் பிறகு ஜென்டில்மேன் படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அந்த அளவுக்கு நிறைய சினிமாவைப் பற்றி கற்றுக்கொண்டு தன்னுடைய முதல் படத்திலேயே தரமான இயக்குனர் என்ற பெயரை வாங்கியவர் சங்கர்’ என எஸ் கே சந்திரசேகர் அந்த பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க: நடிகரின் கெட்டப்பழக்கத்தால் படாத பாடுபட்ட ஸ்ரீதேவி!.. மனுசன் ரொம்ப டெராரா இருப்பார் போல!..

ஜென்டில்மேன் படம் தான் சங்கருக்கு முதல் படம். ஆனால் ஜென்டில்மேன் படத்திற்கு முன்பே அவர் எடுக்க வேண்டி திரைப்படம் அழகிய குயிலே. இந்த படத்தின் கதையை குஞ்சுமோனிடம் சங்கர் சொன்னபோது முதலில் ஜென்டில்மேன் படத்தை எடுத்து விடலாம். அதன் பிறகு இந்த அழகிய குயிலே படத்தை பார்ப்போம் என சொல்லிவிட்டாராம். அவர் சொன்னதைப் போல ஜென்டில்மேன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அந்த படத்திற்கு பிறகாவது அழகிய குயிலே திரைப்படத்தை எடுத்தார்களா என்றால் இல்லை. மீண்டும் குஞ்சுமோன் காதலன் திரைப்படத்தை முடித்து விடலாம் என்று சொல்ல காதலன் திரைப்படத்தையும் ஷங்கர் முடித்திருக்கிறார். இந்த இரு படங்களின் வெற்றியை பார்த்த ஏ எம் ரத்தினம் லஞ்சத்திற்கு எதிராக நான் உருவாக்கி வைத்திருக்கும் இந்தியன் படத்தை எடுத்து விடலாம் என சொல்லி இந்தியன் படத்தை முடித்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க:கியாரா அத்வானி எல்லாம் கால் தூசுக்கு வருமா!.. இந்த வயசுலயே இப்படி ஜொள்ளு விட வைக்கிறாரே ஸ்ரீதேவி!..

அதன் பிறகு ஜீன்ஸ் படம் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்க சங்கரால் அழகிய குயிலை திரைப்படத்தை எடுக்க முடியாமல் போனதாம். ஒரு சமயம் இதைப் பற்றி பிரபல எழுத்தாளர் சுஜாதாவிடம் சங்கர் கூறியிருக்கிறார். அப்போது சுஜாதா உன்னுடைய குயிலே திரைப்படத்தை எல்லாம் ஓரங்கட்டி விடு.

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப உன்னை மாற்றிக்கொள். இந்த வயதில் நீ பண்ண வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கிறது. முதலில் அதை பார். பிறகு நீ எப்பொழுது ஃப்ரீயாக இருக்கிறாயோ அந்த நேரத்தில் இந்த அழகிய குயிலே திரைப்படத்தை பற்றி யோசி என கூறிவிட்டாராம். அன்றிலிருந்து இன்று வரை இந்த அழகிய குயிலே திரைப்படத்தின் கதை அப்படியே சங்கரின் கருவூலத்தில் பத்திரமாக இருக்கிறது என சித்ரா லட்சுமணன் கூறினார்.

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

9 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

9 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

10 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

11 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

17 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

18 hours ago