Bhagyaraj: முருங்கைக்காய் ரகசியம் உண்மையா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய பாக்யராஜ்

முருங்கைக்காய் என்றாலே நம் அனைவருக்கும் நியாபகத்திற்கு வருவது நடிகர் பாக்யராஜ். முருங்கைக்காயில் இவ்ளோ மேட்டர் இருக்கிறதா என்பதை இந்த உலகுக்கு புரிய வைத்தவர். அதுவும் முந்தானை முடிச்சு படத்தில்தான் முருங்கைக்காய் கான்சப்ட்டையே கொண்டு வந்தார். அந்தப் படத்தின் மூலம் தான் நடிகை ஊர்வசி தமிழில் அறிமுகமானார். அப்போது ஊர்வசிக்கும் வயது 13.

ஆனால் ஊர்வசிக்கு முன்பு அந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர் ஊர்வசியின் மூத்த அக்காதானாம். பாக்யராஜை பார்க்க தன் அக்காவுடன் வந்த ஊர்வசி வாய் துருதுருனு அப்போதே பேசிக் கொண்டிருந்தாராம். அது பிடிக்க போய்தான் முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசியை ஹீரோயினாக அறிமுகம் செய்திருக்கிறார்.

இப்போது ஊர்வசி தமிழில் அவ்வளவு படங்கள் பண்ணவில்லை என்றாலும் மலையாளத்தில் அவருக்கு என தனி மார்கெட் இப்போது வரை இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் பாக்யராஜுக்கு 50வருட விழா கொண்டாடப்பட்டது. அதனால் பாக்யராஜுடன் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் அந்த விழாவிற்கு அழைக்கப்பட்டனர். அதில் ஊர்வசியும் கலந்து கொண்டார். மேடையில் ஏறிய ஊர்வசிக்கு பரிசாக பாக்யராஜ் முருங்கைக்காயை கொடுத்தார்.

அதை பார்த்ததும் கீழே இருந்த அனைவரும் சிரித்து விட்டனர். ஆனால் அந்த முருங்கைக்காயை பார்த்ததும் ஊர்வசி, ‘சார் இந்த முருங்கைக்காயில் ஒன்னுமே இல்ல சார். முந்தானை முடிச்சு படத்தில் அந்த சீன்லாம் இருக்கும். ஆனால் நிஜத்தில் அப்படியெல்லாம் இல்லை சார்’ என பாக்யராஜுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் பாக்யராஜ், ‘உனக்கு வொர்க் அவுட் ஆகலைனா என்ன? மத்தவங்களுக்கு வொர்க் அவுட் ஆகியிருக்கும்’ என நக்கலாக பதில் சொன்னார்.

சரி. உண்மைனு உங்களுக்கு எப்படி தெரியும் என ஊர்வசி கேட்க அதற்கு ஒரு பிளாஷ்பேக்கை சொன்னார் பாக்யராஜ். அதாவது பாக்யராஜ் சிறு வயதாக இருக்கும் போது அவருடைய பாட்டி அசைவ உணவு சமைத்தால் இவருக்கு கறி, கோழி என நிறைய பீஸுகளை எடுத்து வைப்பாராம். ஆனால் முருங்கைக்காய் குழம்பு வைக்கும் போது மட்டும் பாக்யராஜின் மாமாக்களுக்கு நிறைய முருங்கைக்காய்களை வைப்பாராம்.

பாக்யராஜுக்கு ஒரு காய் மட்டும் வைத்து மீதி குழம்பை ஊற்றுவாராம். ஏன் பாட்டி, ஒரு காய் வைக்குற? கூட கொஞ்சம் வேணும் என்று கேட்டால் பாட்டி வைக்கவே மாட்டாராம். இது ஏன் என தெரிந்து கொள்ள தன் மூத்த வயதுடைய நண்பரிடம் கேட்டிருக்கிறார் பாக்யராஜ். அப்போதுதான் கல்யாணம் பண்ணவங்க இத நிறைய சாப்பிடணும். நீயெல்லாம் நிறைய சாப்பிடக் கூடாது என்று கூறினாராம். இதை வைத்துதான் முந்தானை முடிச்சு படத்தில் அப்படியொரு கான்சப்ட்டை வைத்ததாக பாக்யராஜ் கூறினார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

7 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago