More
Categories: latest news

அந்த கொடுமையை நினைச்சாலே நெஞ்செல்லாம் வலி தான்!.. பாவனா பளிச் பேட்டி!..

நடிகை பாவனா சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்திற்கு பிறகு திரைத்துறையை விட்டு சற்று விலகி இருந்தார். இந்நிலையில் தற்போது அந்நிகழ்வினைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

பாவனா நம்மல் என்னும் மளையாள படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து நாள்பட்ட இளங்கலை, சி.ஐ.டி.மூசா, ஐவர், ஓடுபாதை, காவல், நாரன் என பல மளையாளப் படங்களில் நடித்து வந்தார். மேலும் சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தில் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பிற்கு பிறகு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான், ஆர்யா, கூடல் நகர் போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

2017ம் ஆண்டு பாவனாவுக்கு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் அவரை ரொம்பவே பாதிக்க செய்தது. பாவனாவின் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் பின்பு பாவனா அடுத்த ஆண்டே தயாரிப்பாளரான நவீன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

பல ஆண்டுகள் அந்நிகழ்வினை பற்றி மனம் திறந்து பேசாமல் இருந்து வந்த பாவனா தற்போது அதுகுறித்து பேசியுள்ளார். அந்த சமயத்தில் கமிட்டான பல படங்களில் இருந்து விலகி விட்டேன். ஆனால், பிருத்விராஜுடன் நடிக்கவிருந்த படத்துடைய இயக்குனர் மட்டும் நான் இல்லாமல் படம் எடுக்க மாட்டேன் என கூறியிருந்தார். அந்த படம் தான் நான் மீண்டும் திரையில் வர உதவியது. அதே போல் எனக்கு வெளியுலகத்தில் நடப்பதை பற்றி தெரியாது தெரிந்துக்கொண்டு நான் என்ன செய்ய போகிறேன் அப்படியே தெரிந்துக்கொண்டாலும் ஏதாவது ஒரு விஷயம் என் மனதை பாதிக்கும் படி இருக்கும். கூட்டத்தை பார்த்தால் பயம், படம் கமீட்டாக பயம் என மனதளவில் வீக்காக இருக்கிறேன் என தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும், பாவனா அந்த கசப்பான நிகழ்வினை மறந்து தன் கணவர் நவீனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தமிழில் அவர் அஜித்துடன் நடித்திருந்த அசல் படத்திற்கு பிறகு தற்போது தி டோர் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

Published by
Saranya M

Recent Posts