மோகன்லாலுடன் மோதும் பாவனா!.. தி டோர் படத்துக்கு சென்சார் போர்டு கொடுத்த சான்றிதழை பாருங்க!..

by Saranya M |   ( Updated:2025-03-20 10:25:57  )
மோகன்லாலுடன் மோதும் பாவனா!.. தி டோர் படத்துக்கு சென்சார் போர்டு கொடுத்த சான்றிதழை பாருங்க!..
X

#image_title

கடந்த சில நாட்களாகவே இந்த படத்திற்காகத்தான் நடிகை பாவனா கோலிவுட்டில் தீவிரமாக புரமோஷன் செய்து வருகிறார். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் பற்றியும் தமிழில் பல ஆண்டுகளாக தலை காட்டாது குறித்தும் பேசியுள்ளார். அதற்கு முக்கிய காரணமே, இயக்குநர் ஜெய்தேவ் இயக்கத்தில் நடிகை பாவனா நடிப்பில் வெளியாக உள்ள 'தி டோர்' படம் விரைவில் வெளியாகிறது. அந்த படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

நடிகை பாவனா 11ம் வகுப்பு படிக்கும்போதே தனது திரைப்பயணத்தை தொடங்கிவிட்டார். நம்மல் என்னும் மளையாள படம் மூலம் அறிமுகமான இவர் தமிழில் சித்திரம் பேசுதடி படத்தில் நடித்து பிரபலமானார். அதை தொடர்ந்து ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துகள், தீபாவளி என பல படங்களில் நடித்துள்ளார்.

பாவனா கன்னட தயாரிப்பாளரான நவீன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். மேலும், பிரபல மளையாள நடிகரால் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியும் வழக்கு தொடுத்தும் பெண்களின் மனதில் தைரியத்தை உருவாகியுள்ளார். தி டோர் படத்தின் புரமோசனுக்காக பேட்டிக் கொடுத்து வந்த பாவனா தனக்கு ஏற்பட்ட நிகழ்விலிருந்து மீண்டு வர பல ஆண்டுகள் தேவைப்பட்டது, இப்போதும் எதை பார்த்தாலும் பயமாக இருக்கிறது. நான் எந்த தவறும் செய்ய வில்லை இருந்தாலும் நான் ஏன் அதை மறைக்க வேண்டும் என்று தான் வழக்கு தொடர்ந்தேன். இப்போது நான் என் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இயக்குநர் ஜெய்தேவ் இயக்கியுள்ள ’தி டோர்’ படம் தமிழிலும் அடுத்த வாரம் வெளியாகிறது. பாவனா, ஜெயபிரகாஷ், நந்து, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரர் த்ரிலராக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து பாவனா சீக்கிரமே தமிழ் படத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் மோகன்லாலின் எம்புரான் படத்துக்கு போட்டியாக பாவனாவின் டோர் படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Next Story