More
Categories: Cinema News latest news

பவதாரிணி இறப்புக்கு இதனால் தான் சித்தப்பா கங்கை அமரன் வரலை… விஷயத்தை கசியவிட்ட பயில்வான்…

Bhavatharini: இளையராஜாவின் மகள் பவதாரிணியின் திடீர இறப்பு பலருக்கு அதிர்ச்சி ஆகி இருக்கும் நிலையில், அவர்கள் குடும்பத்துக்குள் பிரச்னை இருந்ததாக கூறப்படுவது குறித்த முக்கிய தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் கொடுத்து இருக்கும் பேட்டியும் வைரலாகி வருகிறது.

அதிலிருந்து, பவதாரிணி பூதவுடல் பண்ணைப்புரத்தில் பாட்டி மற்றும் அம்மாவுக்கு இடையே புதைக்கப்பட்டது. இளையராஜா முதல் பல பிரபலங்கள் அங்கு வந்தனர். ஆனால் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த அவரின் சித்தப்பாவும், இயக்குனருமான கங்கை அமரன் வரவில்லை. 

இதையும் படிங்க:டிரெஸ் மொத்தமே 50 கிராம்தான் தேறும்!.. கில்மா உடையில் கிளுகிளுப்பு காட்டும் ஆண்ட்ரியா…

இசைஞானியின் உடன்பிறந்தவர். அண்ணன் பாஸ்கர், அடுத்து இளையராஜா, கடைக்குட்டி தான் கங்கை அமரன். இதில் அண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டார். கங்கை அமரன் தன் அண்ணன் இளையராஜாவுக்கு கேடயமாக இருந்து வந்தவர். சென்னைக்கும் சரி பண்ணைப்புரத்துக்கும் வரவில்லை.

இதுக்கு காரணம், முதலில் இளையராஜா ரொம்பவே டென்சன் பார்ட்டி. யாரினை எதிர்க்கவும் தயங்கவே மாட்டார். ஏவிஎம்மில் பிரச்னை செய்தார். அங்கிருந்து பிரசாத் ஸ்டுடியோவுக்கு வந்தார். அங்கையும் ராஜ உபசாரம். ஆனால் இளையராஜாவை காலி செய்ய சொல்ல அவர் மறுத்துவிட்டார். பிரச்னை வெடிக்கவே இளையராஜா வாடகை தராத விஷயம் வந்தது.

இதை தொடர்ந்தே கோர்ட் தலையிட்டு இளையராஜாவை வெளியேற்றியது. பாலசந்தர், மணிரத்னத்துடன் என பல பெரிய பிரபலங்களுடம் பிரச்னை செய்து வந்தார். அதனால் தான் ஏ.ஆர்.ரஹ்மானே சினிமாவுக்கு வர முடிந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் பிரச்னை. 

இதையும் படிங்க: அட மீண்டும் மீண்டுமா? அஜித்தின் அடுத்த படத்தினை இயக்க போவது இந்த இயக்குனரா?

இளையராஜாவுக்கு இசை ஞானம் மட்டும் தான் உண்டு. படத்தினை யுகிக்க தெரியாதவர். அப்படி காசுக்காக நாயாய், பேயாய் அழைந்தவர் இளையராஜா. ஆனால் அவரின் இசைக்கு மிஞ்சியவர் யாருமே இல்லை. அதில் சந்தேகமே இல்லை. அவரின் மறுப்பக்கம் ரொம்பவே மோசமானது. வைரமுத்துவுடன் பிரச்னை வந்த போது கங்கை அமரன் தான் முன் நின்று அந்த பிரச்னைகளை தாங்கி கொண்டார்.

அப்படி இருந்த கங்கை அமரனை வெளியில் போடா நாயே என துரத்தி விட்டவர். சமீபத்தில் தான் இருவருக்கும் பிரச்னை ஓய்ந்தது. ஆனாலும் கங்கை அமரனுக்கு அண்ணன் மீது இன்னமும் கோபம் குறையவே இல்லையாம். ஒரு பேட்டியில் கூட என் பாட்டுக்கெல்லாம் அண்ணன் பெயரை போட்டுக்கொண்டார்.

அதை நான் கவலையே கொள்ளவில்லை. பாட்டை இசையமைப்பது கங்கை அமரன் என்றால் சம்பளம் இளையராஜாவுக்கு கிடைக்கும். நன்றி இல்லாதவரா இருக்காரே என்று மனகுமறல் தானாம். பவதாரிணி மறைவுக்கு வந்தால் அண்ணனை பார்க்க நேரிடும் என்பதால் தான் அஞ்சலி செய்ய வரவில்லையாம். மகளுக்காக தனியே வருந்தியதாக தான் தகவல் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். 

இதையும் படிங்க: ரெடியாகிறதா மதராசப்பட்டினம் 2? ஆர்யாவுக்கு பதில் இவர்தான் ஹீரோவா? வைரலாகும் புகைப்படம்

Published by
Akhilan

Recent Posts