Connect with us
myskin

Cinema News

போதையில் மிஷ்கினிடம் சிக்கிய மணிரத்னம்… பார்ட்டின்னாலே தெறித்து ஓடும் பெரிய இயக்குனர்கள்…

சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். திரையுலகில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வருபவர் இவர். குறிப்பாக சிறந்த கதை சொல்லியாக விளங்கும் மிஷ்கின் விதவிதமான கோணங்களில் காட்சிகளை எடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைப்பார். அஞ்சாதே, சைக்கோ, பிசாசு உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருக்கிறார்.

நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பது போல மிஷ்கின் இயக்கும் படங்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். பிசாசு 2 படத்தை இயக்கி முடித்த கையோடு அடுத்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார். ஒருபக்கம் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இப்போது லியோ படத்திலும் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: சேரனோட சரக்கு போட்டு செம டேன்ஸு!.. இவ்வளவு ஓப்பனாவா சொல்லுவாரு மிஷ்கின்!…

மிஷ்கினிடம் ஒரு பிரச்சனை உண்டு. பெரிய நடிகர் மற்றும் இயக்குனர் என்றாலும் சரி, சிறிய நடிகர் மற்றும் இயக்குனர் என்றாலும் சரி. அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வார். ‘வாடா போடா’ என்றுதான் பேசுவார். ஊடகங்களில் பேசும்போதும் ‘அவன் இவன்’ என்றுதான் பேசுவார். ‘கேட்டால் நான் அன்பை காட்டுகிறேன்’ என சொல்வார். அதை எல்லோரும் ரசிக்க மாட்டார்கள் என்பதுக்கு அவருக்கு புரியாது.

சினிமா விழாக்களில் பேசும்போதும் அப்படித்தான் பேசுவார். இது பலரையும் முகம் சுழிக்க வைக்கும். சமீபத்தில் நடிகர் விஜயை அப்படி பேசி விஜய் ரசிகர்களின் கோபத்தில் சிக்கினார். இதைத்தொடர்ந்து மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒட்டியதோடு, சமூகவலைத்தளங்களில் 2 நாளைக்கு மிஷ்கினை விஜய் ரசிகர்கள் வச்சு செய்தனர்.

இதையும் படிங்க: வாய்ப்பே இல்ல!.. அதை மட்டும் பண்ணவே மாட்டேன்!.. விஷால் விவாகரத்தில் புலம்பிய மிஷ்கின்…

இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், கவுதம் மேனன், கார்த்திக் சுப்பாராஜ், முருகதாஸ், லோகேஷ் கனகராஜ், சசி, வெற்றி மாறன் போன்ற இயக்குனர்கள் அவ்வப்போது ஒரிடத்தில் ஒன்றாக சந்திப்பார்கள். அப்போது பார்ட்டியும் நடப்பதுண்டு. அதில் மிஷ்கினும் கலந்து கொள்வார்.

ஒருமுறை போதையில் இருந்த மிஷ்கின் மணிரத்தினத்தை பார்த்து ‘நீங்க எப்ப நல்ல படம் எடுக்க போறீங்க?’ என கேட்க மணிரத்னம் அரண்டு போய்விட்டாராம். அதேபோல், மிஷ்கினை விட 10 வயது மூத்தவர் பாலாஜி சக்திவேல். அவரை ‘வாடா போடா’ என்றுதான் மிஷ்கின் அழைப்பாராம். இதனால், மிஷ்கின் பார்ட்டிக்கு வரார் என்றாலே பெரிய இயக்குனர்கள் தெறித்து ஓடுகிறார்களாம்.

இப்படியே போனால் மிஷ்கின் இல்லாமல்தான் இனிமேல் இயக்குனர்களின் சந்திப்பு நடக்கும் என கணிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: கமலிடம் கதை சொல்லபோய் பல்பு வாங்கிய மிஷ்கின்.. அசிங்கமா போச்சி குமாரு!..

google news
Continue Reading

More in Cinema News

To Top