Categories: latest news

இந்த முறை பிக்பாஸில் போன் Allowed’அ? 5 போட்டியாளர்கள் ஒன்றாக எடுத்த செல்பி!

பிக்பாஸ் 5 சீசன் ஆரம்பமாக இன்னும் ஒருசில நாட்களே உள்ளன. இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று முடிந்தது. வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல் விஜய் டிவியில் பிக்பாஸ் ஒளிபரப்பாகவுள்ளது.

இதுவரை நடந்து முடிந்த 4 சீசன்களிலுமே போன் உபயோகிக்கக்கூடாது என்பது போட்டியாளர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையாக இருந்தது. ஆனால், இந்த முறை CONTESTANT எல்லோரும் மொபைல் வைத்திருப்பார்களோ என்ற குழப்பம் தற்போது நிலவி வருகிறது.

Bigg boss 5

காரணம் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் 5 போட்டியாளர்கள் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஷாலு ஷம்மு மற்றும் ஷகிலா மகள் உள்ளனர். இதை பார்த்த பலரும் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தது. அப்படி இருக்கும்போது இவர்கள் கையில் போன் எப்படி? என முணுமுணுக்கின்றனர்.

Published by
பிரஜன்