Connect with us
amir

Biggboss Tamil 5

அமீருக்கு கறி சாப்பாடு, பிரியாணிலாம் என்னன்னே தெரியாது – வளர்த்தவர் கண்ணீர் பேட்டி!

அவன் அப்படிப்பட்ட பையன் கிடையாது பாவினி விஷயம் குறித்து மனம் திறந்த அர்ஷாப்!

பிக்பாஸ் 5 போட்டியாளர்களில் ஒருவரான அமீர் வைல்ட் கார்ட் என்ட்ரியில் கலந்துக்கொண்டு வெகு சீக்கிரமே தமிழக மக்கள் அனைவரும் அறியத்தக்க முகமாக மாறினார். அதறகு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பாவினியுடன் வர காதல், ரொமான்ஸ் என இருப்பது தான்.

அமர் அவரது தந்தையை மிகவும் சிறிய வயதிலே இழந்து விட்டார். அதையடுத்து அவரது தாய் கொலை செய்யப்பட்டு இறந்துவிட்டதாக பிக்பாஸில் தெரிவித்து அனைவரையும் மனம் குலைய செய்தார். அவனது அம்மாவின் உடலுக்கு இறுதி சடங்கு செய்வதற்கு கூட தன்னிடம் பணம் இல்லை என கூறியது மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகியது.

அதன் பின்னர் அமீர் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற நடன கலைஞராக அவதாரமெடுத்தார். அதற்கு பெரிதும் உதவியவர் அர்ஷாப் என்ற நபர். இவர் தான் அவரது வீட்டில் தங்க வைத்து சாப்பாடு கொடுத்து, டான்சிங் ஸ்டூடியோ வைக்க உதவி செய்தது எல்லாமே. அமீருக்கு ஈர்த்து வீட்டிற்கு போன பிறகு தான் கறி சோறுன்னா என்ன? பிரியாணின்னா என்ன என்றே தெரியும் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: இஷ்டம் இருந்தா பாரு இல்லனா போ… லிமிட் தாண்டமாட்டேன்னு ஒத்த காலில் நிற்கும் நடிகை!

மேலும், பாவினி விஷயத்தை குறித்து கேட்டதற்கு, அவர் அப்படிப்பட்ட பையன் இல்லை என்று நான் அறுத்து கூறுவேன். பிக்பாஸில் ஏதோ மைண்ட் கேம் நடக்கிறது. இந்த இடத்திற்கு வர அவன் மிகவும் கஷ்டப்பட்டான் ஒரு பெண்ணுக்காக இப்படிபட்ட வாய்ப்பை அவன் பறிக்கொடுக்க மாட்டான் என அடித்து கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 5

To Top