1st ப்ரோமோ அழுகை... 2nd ப்ரோமோ சண்டை... 3rd ப்ரோமோ சிரிப்பு... இன்னைக்கி சம்பவம் இருக்கு...

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக 3 ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் முதல் ப்ரோமோவில் அழுகையாகவும், இரண்டாவது ப்ரோமோவில் சண்டையாகவும், மூன்றாவது ப்ரோமோவில் சிரிப்பு சத்தமாகவும் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இன்றைய நிகழ்ச்சி வெற லெவலில் இருக்கப் போகிறது என பிக்பாஸ் விரும்பிகள் தங்களின் கருத்துகளை கமெண்ட்கள் வழியாகத் தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில் வழக்கம்போல், ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்கின் படி பாவனி ரெட்டி அழுது கொண்டே பேசுகிறார். அதில், தனது கணவரும், அவரும் பல சோதனைகளைத் தாண்டி திருமணம் செய்து கொண்டதாகவும், இதில் பாதியிலே தன்னை விட்டுச் சென்றுவிட்டதாகவும். மிகவும் வருத்தத்துடன் கூறினார். தனது கணவர் இறந்த சமயத்தில் தனக்கு அழுகை வரவில்லை கோபம் தான் வந்தது. மேலும், எனது கணவரை மிகவும் நேசிக்கிறேன். மீதமுள்ள எனது வாழ்க்கை தனியாகத் தான் வாழ வேண்டும் என எழுதி இருக்கிறது போல என உருக்கமாகப் பேசியுள்ள வீடியோ முதல் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.

இரண்டாவது ப்ரோமோவில், தாமரைச் செல்வி மற்றும் நமீதா மாரிமுத்து இவரிடம் மோதல் போக்கு இருப்பது போலத் தெரிகிறது. ப்ரோமோ தொடக்கத்திலே நாளைக்குப் பெரிய சண்டை இருக்கு என நமீதா கூற, அடுத்த காட்சியில் பிரியங்கா, தாமரையிடம் அவ முன்னாடி சிரிச்சு பேசாதே எனக் கூறிய படியும், உங்கள் ஊர் மொழியில் பேசியது அவர்களுக்குப் புரிந்திருக்காது என இமான் அண்ணாச்சி கூறுகிறார். இதற்கு இடையிலே நமீதாவை இமான் அண்ணாச்சி சமாதானம் பேச அழைத்த போது, அதை மறுத்து விடுகிறார். இதை வைத்துப் பார்க்கும் போது சண்டை பெரிதாக இருக்கும் எனக் கணிக்க முடிகிறது.

முதல் இரண்டு ப்ரோமோவுக்கு மாறுதலாக 3வது ப்ரோமோ அமைந்துள்ளது என்றே கூறலாம். இதில், இமான் அண்ணாச்சி மற்ற போட்டியாளர்கள் போல நடித்துக் காட்டுகிறார். அவரின் குறும்புத் தனத்தை அனைவரும் ரசித்துச் சிரிக்கின்றனர். இதற்கிடையே பிரியங்கா வயிற்றில் தலையணையை வைத்து இமான் அண்ணாச்சி போல, ”ஏலே நீ அண்ணாச்சியா இல்ல நான் அண்ணாச்சியா” எனக் கேட்க அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். மேலும், இமான் அண்ணாச்சி, ராஜு, பிரியங்கா ஆகியோர் மட்டும் இல்லை என்றால் பிக்பாஸ் 5 பார்க்கவே முடியாது என்ற கமெண்டுகளும் கண்ணில்படுகின்றன.

 

Related Articles

Next Story