Biggboss Tamil 8: நிகழ்ச்சி 'எப்போ' தொடங்குது தெரியுமா?

முதன்முறையாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது.

கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன் தற்போது அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். இதையடுத்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு சர்ச்சை போட்டியாளர்கள் வீட்டினுள் செல்கின்றனர். இதனால் டிஆர்பி திடீரென எகிறும் அபாயம் இருக்கிறது. வீட்டுக்குள் சாயா சொலின், ரஞ்சித், ஆர்ஜே ஆனந்தி, ஸ்ரீதேவி விஜயகுமார், பப்லூ பிரித்விராஜ் ஆகியோர் செல்ல இருக்கின்றனர்.

sethu

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்பதற்கான பதில் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி வருகின்ற செப்டம்பர் 29-ம் தேதி அல்லது அக்டோபர் 6-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை வைத்துப் பார்க்கும்போது கடந்த வருடம் போல இந்த வருடமும் போட்டியாளர்களுக்கு தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என முக்கிய பண்டிகைகள் வீட்டுக்குள் தான் இருக்கும் போல.

எது எப்படியோ பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கூட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருடாவருடம் மவுசு கூடிக்கொண்டே போகிறது என்பது தான் உண்மை.

manju
manju  
Related Articles
Next Story
Share it