Connect with us

Cinema News

அவங்களுக்கு மட்டும் தனி சட்டமா?… சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ்!

புதிய தொகுப்பாளர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பிக்பாஸ் புரோமோ சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

கடந்த ஏழு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன் தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார். அவருக்கு பதிலாக சரத்குமார், பார்த்திபன், சிம்பு, ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி ஆகியோர் பெயர் அடிபட்டது.

இதில் விஜய் சேதுபதி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக கோட் சூட் அணிந்து உள்ளே வந்து விட்டார். அவரை வைத்து புரோமோ ஷூட் செய்து அதனை அதிகாரப்பூர்வமாகவும் வெளியிட்டு விட்டனர்.

கலோக்கியலாக அவுட்டோர் சூட்டில் எடுக்கப்பட்ட இந்த புரோமோ அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் வழக்கம்போல புரோமோவை அலசி ஆராய்ந்த ரசிகர்கள் அதில் உள்ள தவறினை கண்டறிந்து கொதித்து எழுந்துள்ளனர்.

அதாவது வீடியோவில் அனைவரும் சார், தம்பி, அங்கிள் என அழைத்துள்ளனர். ஆனால் ஒருவர் மட்டும் சேது என கேஷுவலாக அழைத்து பேசுகிறார். தனியொரு உலகத்தில் வாழும் பிராமணர் ஒருவரின் பிரதிபிம்பமாக வரும் அவர் பெயர் சொல்லி அழைத்தது ரசிகர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

எப்போதுமே அவர்களுக்கு மட்டும் என்ன தனி சட்டமா? ஏன் இப்படி அவர்களை மட்டும் உயர்த்திப் பிடிக்கிறீர்கள் என ஆளாளுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனால் இந்த நிகழ்ச்சி தற்போது ஆரம்பத்திலேயே சர்ச்சையில் சிக்கி வெற்றிகரமாக டிஆர்பி வேட்டைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

இன்னும் போகப்போக எந்தெந்த சர்ச்சைகளில் எல்லாம் பிக்பாஸ் சிக்கப் போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top