கருப்பா இருக்க.. எப்படி அஜித் படத்துல? பல தடவை தல படத்தை மிஸ் பண்ண சோகத்தில் நடிகர்

Black Pandi: கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் ப்ளாக் பாண்டி. அந்த சீரியலில் அவரின் நகைச்சுவை இன்றளவு மிகப்பிரபலம். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அதில் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் அங்காடித்தெரு திரைப்படம்.

அந்த படத்தில் படமுழுக்க வரும் ப்ளாக் பாண்டியின் காமெடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சமீபகாலமாக ப்ளாக் பாண்டியை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. படவாய்ப்புகள் இல்லாமல் அவர் தவித்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இதையும் படிங்க: சொந்த செலவிலேயே சூனியம் வைக்குமா ரெட் ஜெயண்ட்? ‘இந்தியன் 2’ படத்தில் தடாலடியாக ஏற்பட்ட மாற்றம்

அந்த நிலையில்தான் சிவகார்த்திகேயனிடம் உதவி கேட்க சிவகார்த்திகேயன் அவரது மேனேஜரை வைத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்பியிருக்கிறார். ஆனால் இதைப் பற்றி ப்ளாக் பாண்டியின் அம்மா ‘எங்களுக்கு காசு பணம் வேண்டாம். சிவகார்த்திகேயனின் படத்தில் ப்ளாக் பாண்டிக்கு வாய்ப்பு கொடுத்தால் போதும்’ என சொல்லி அந்த 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு திருப்பி அனுப்பிவிட்டாராம்.

ஆனால் இதிலிருந்தே சிவகார்த்திகேயன் ப்ளாக் பாண்டியிடம் பேசுவதில்லை என்று கூறினார். இந்த நிலையில் ப்ளாக் பாண்டி இசையமைப்பாளராக புது அவதாரம் எடுத்திருக்கிறார். ஒரு படத்திற்கு கூட இசையமைத்துக் கொண்டிருக்கிறாராம். அவரை பொறுத்தவரைக்கும் அஜித் கூட எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறாராம்.

இதையும் படிங்க: விடாமுயற்சி டீமை வச்சி செய்யும் அஜர்பைஜன்!… இதெல்லாம் சரிப்பட்டு வராது.. ரூட்டை திருப்பிய மகிழ் திருமேனி…

ஏனெனில் அவர் கருப்பாக இருப்பதால் ஆரம்பத்தி அனைவரும் கிண்டல் செய்தார்களாம். அஜித் படத்தில் எப்படி உனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று? அதனால் எப்படியாவது அவருடன் சேர்ந்து நடித்திட வேண்டும் என்ற முயற்சியில் இருப்பதாக ப்ளாக் பாண்டி கூறினார்.

அதுமட்டுமில்லாமல் வீரம் , விஸ்வாசம் போன்ற படங்கள் கிராமத்து சப்ஜெக்ட்டாக இருந்ததால் அதிலாவது எப்படியாவது வாய்ப்பு கிடைக்கும் என ட்ரை பண்ணியிருக்கிறார். ஆனால் எந்தப் படத்திலும் ப்ளாக் பாண்டிக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என்று கூறினார்

 

Related Articles

Next Story