சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரீயூனியன் நிகழ்ச்சி நேற்று சென்னை சேப்பாக் மைதானத்தில் நடந்தது. இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக ஏ.ஆர்.ரகுமான், சிவகார்த்திகேயன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
அந்த மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் ‘தோனி சார் உங்களை டிவியில் பார்த்திருக்கிறேன்.. மைதானத்தில் பார்த்திருக்கிறேன்.. ஆனால் இப்போதுதான் உங்களை நேரில் அருகில் பார்க்கிறேன்.. எனக்கு நடுக்கமாக இருக்கிறது.. நான் உங்களைப் போல நான் கூலான நபர் இல்லை. உங்கள் தலைமை பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும்..
சிஎஸ்கே என்பது எமோஷன். நான் மைதானத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தூரம் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கிறேன். தோனி சார் பேட்டிங் செய்ய வரும்போது எழும் விசில் சத்தம் எனது வீட்டில் கேட்கும்’ என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் இந்த செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ‘அமரன் படம் ஓடினாலும் ஓடுச்சு.. அரசியல். இலக்கியம், ஆன்மீகம், வில்லுப்பாட்டு, விளையாட்டு.. என எங்க திரும்பினாலும் திடீர் தளபதி சலங்கை கட்டி ஆடுகிறார். 25 கிலோமீட்டர் அப்பு.. 25 கிலோமீட்டர்’ என்று அவரின் பாணியிலேயே அவரை கலாய்த்துள்ளார்.
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…