இவனுக்கும் ஒரு பாயாசத்தை போட்ற வேண்டியதுதான்!.. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் பிரபலம்!..

by சிவா |   ( Updated:2025-04-27 01:01:16  )
rajinivijay 1
X

rajinivijay 1

ரஜினி சூப்பர்ஸ்டாராக இருந்தபோது விஜய் சிறுவனாக இருந்தார். விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ரஜினியை வைத்து நான் சிகப்பு மனிதன் படத்தை எடுத்தபோது சிறுவனாக இருந்த விஜய் அந்த ஷூட்டிங்குக்கு போய் ரஜினியுடன் போட்டோவும் எடுத்துகொண்டார். அது இப்போதும் கூகுளில் இருக்கிறது. ஒருகட்டத்தில் விஜய்க்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வர அப்பாவை நச்சரித்து சினிமாவுக்கு வந்தார்.

பல வருடங்கள் நடித்து இப்போது ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார் விஜய். அதோடு, அவருக்கு ரசிகர் கூட்டமும் அதிகரித்துவிட்டனர். விஜய் ஷூட்டிங்கில் இருக்கும் இருப்பது தெரிந்தால் அவரை எப்படியாவது பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டு அங்கு விஜய் ரசிகர்கள் கூடிவிடுகிறார்கள். அதுவும் போலீசாரே கட்டுப்படுத்த முடியாத படி கூட்டம் கூடி விடுகிறது.

ஒருபக்கம் விஜய் படங்களும் மற்ற நடிகர்களை விட அதிக வசூலை பெறுகிறது. கோட் படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்கிய விஜய் இப்போது நடித்து வரும் ஜனரஞ்சகன் படத்திற்கு 250 கோடி சம்பளம் வாங்கியதாகவும் சொல்கிறார். இதனால் ரஜினி - விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் மோதிக்கொண்டனர். விஜய்தான் நம்பர் ஒன், அவர்தான் சூப்பர்ஸ்டார் எனவும் அவர்கள் கூறினார்கள்.

rajini vijay
rajini vijay

அதோடு ஜெயிலர் பட விழாவில் பேசிய ரஜினி ’காக்கா எவ்வளவு பறந்தாலும் அது கழுகின் உயரத்திற்கு பறக்க முடியாது’ என சொல்ல அவர் காக்கா என சொன்னது விஜயை என புரிந்துகொண்ட ரசிகர்கள் ரஜினியை திட்ட துவங்கினார்கள்., நான் விஜயை சொல்லவில்லை என ரஜினி சொல்லியும் அவர்கள் விடவில்லை. ரஜினியின் வேட்டையன் படம் வந்தபோது டிவிட்டரில் அப்படத்திற்கு எதிராக பதிவிட்டனர்.

ஒருபக்கம் தான் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்க வேண்டும் என நினைக்கும் ரஜினி அவ்வப்போது பரபரப்பாக எதையாவது செய்வார். சில நாட்கள் முன்பு சீமானை அழைத்து வீட்டில் 2 மணி நேரம் பேசினார். அதன்பின்னர் சீமான் பெரியாரை பற்றி பேசியது, விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகார் என சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில், நடிகர் விஜய் நேற்று தமிழக வெற்றிக் கழக முகவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று கோவை வந்தார். அப்போது கோவை விமான நிலையத்திலும், அங்கிருந்து அவர் மாநாடு செல்லும் இடத்திற்கு சென்ற போதும் அவரை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் கூடினார்கள். விமான நிலையமே களேபரமாகி விட்டது.

விஜயின் சினிமா மற்றும் அரசியல் வளர்ச்சியை கண்டு ரஜினி பொறாமைப்படுவதாக தொடர்ந்து சொல்லி வரும் பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் தனது டிவிட்டரில் ‘எந்த ஊருக்கு போனாலும் இவனுக்கு வெறித்தனமா கூட்டம் வருதே. விட்டா சி.எம்.ஆகிடுவானோ? சீமான் மாதிரி இவனையும் வீட்டுக்கு வரசொல்லி ஒரு பாயாசத்தை போட்டு விட்ற வேண்டியதுதான்’ என ரஜினி நினைப்பது போல மீம்ஸ் போட்டு கலாய்த்திருக்கிறார்.

Next Story