அப்பா, அம்மாவுக்கு வீடு கட்ட நினைச்சது தப்பா!.. பாபி சிம்ஹாவை ரியல் அழுகினி குமாரா மாத்திட்டாங்களே!..

நடிகர் பாபி சிம்ஹா விதிகளை மீறி கொடைக்கானலில் உள்ள பாறைகளை வெடிவைத்து தகர்த்து தனது சொந்த வீட்டை கட்டி உள்ளதாக அவர் மீது சமீபத்தில் பரபரப்பு புகார் ஒன்று எழுந்தது.

அதற்கு முன்னதாக பாபி சின்கா மீது புகார் கொடுத்த முகமது உசைன் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் நடிகர் பாபி சிம்ஹா வீடு கட்டித் தர கான்ட்ராக்ட் பெற்றுவிட்டு தன்னை மோசடி செய்து ஏமாற்றி விட்டதாக புகார் அளித்திருந்தார்.

இதையும் படிங்க: சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் ஏகப்பட்ட பிட்டு போட்டு ஒட்டியதெல்லாம்.. இப்படி ஒரே மாசத்துல உடையுதே!..

பாபி சிம்ஹா மற்றும் உசேன் இருவரும் மாற்றி மாற்றி புகார் அளித்துள்ள நிலையில், முதன்முறையாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பாபி சிம்ஹா தனது தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளார்.

பீட்சா, சூதுகவ்வும், ஜிகர்தண்டா, திருட்டுப் பயலே 2, பெங்களூர் நாட்கள், வசந்த முல்லை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. கொடைக்கானலில் தனது பெற்றோருக்காக பங்களா வீடு ஒன்றை கட்டி வந்த நிலையில், அந்த வீட்டின் புதுமனை புகுவிழாவை முடித்த நிலையில், காண்ட்ராக்டர் உசேன் சரியாக வீடு கட்டித் தரவில்லை என்கிற புகாரை பாபி சிம்ஹா கொடுத்திருந்தார்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து 2 டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு!.. அந்த நடிகைக்கு கிடைக்க காரணமே அந்த மேட்டர் தானாம்!..

இந்நிலையில் அவர் அளித்த விளக்கத்தில், முத்தம் ஒரு கோடியே 30 லட்சத்தில் வீடு கட்டி தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதில் ஒரு கோடி 20 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டேன். ஆனால், வீட்டையும் சரியாக கட்டி தராமல் வெறும் 60 லட்சம் மட்டுமே கொடுத்தேன் எனவும் வீடு கட்ட அரசு விதியை மீறி ஜேசிபி மற்றும் வெடி மருந்துகளை வைத்து பாறைகளை தகர்த்தெறி வீண் பழியை சுமத்தியுள்ளனர் எனக்கூறியுள்ளார்.

வீடு கட்டிய கான்ட்ராக்டர் தான் எங்கிருந்து பாறைகளை எடுத்து எப்படி வீடு கட்டினால் என்பது அவருக்குத்தான் தெரியும். ஆனால் இந்த பிரச்சனை நடந்ததும் சம்பந்தமில்லாமல் என்னை கோர்த்து விடப் பார்க்கிறார். 90% பணத்தையும் வாங்கிவிட்டு பணத்தையும் நான் தரவில்லை என்று புகார் அளித்துள்ளனர். ஆனால், பணம் கொடுத்த அனைத்து ஆதாரமும் என்னிடம் உள்ளது நீதிமன்றத்தில் சரியான நீதிக்காக போராடுவேன் என பேசியுள்ளார்.

ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த் பாபி சிம்ஹாவை நம்ப வைத்து கூடவே இருந்து குழி பறித்தது போல பாபி சிம்ஹாவின் நண்பர் மூலமாக வந்த அவரது உறவினரான வீடு கட்டும் காண்ட்ராக்டர் இப்படியொரு சம்பவத்தை செய்து விட்டாரா? என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

 

Related Articles

Next Story