
Box Office
Kantara 2: 6 நாட்களில் அதகளம் செய்த காந்தாரா 2… இது வேறலெவல் கலெக்ஷன்!….
Kantara Chapter 1: கன்னடத்தில் உருவான காந்தாரா திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு 2002ம் வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு ஹிந்தி மொழிகளும் இந்த படம் நல்ல வசூலை பெற்றது. இந்த படத்தை நடிகரும் இயக்குனருமான ரிசப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். சுமார் 16 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 400 கோடி வசூலை தாண்டியது.
இந்த வெற்றி கொடுத்த மகிழ்ச்சியிலும், நம்பிக்கையிலும் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை Kantara Chapter 1 என்கிற தலைப்பில் உருவாக்கினார் ரிசப் ஷெட்டி. இரண்டு வருடங்களுக்கு மேல் இந்த படத்தின் வேலைகள் நடந்து வந்தது. இந்த படம் உருவானபோது படப்பிடிப்பில் சிலர் உயிரையும் இழந்தனர். பல பிரச்சினைகளையும் தாண்டி படத்தை முடித்து கடந்த 2ம் தேதி படத்தை உலகம் முழுவதும் வெளியிட்டார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியானது.
முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த மலைவாழ் மக்களின் காவல் தெய்வமான பஞ்சுருளி கடவுளை அடிப்படையாக வைத்து இந்த படத்தையும் ரிசப் ஷெட்டி உருவாக்கி இருக்கிறார். முதல் பாகத்தில் வந்தது போலவே இரண்டாவது பாகத்திலும் பஞ்சுருளி தெய்வம் வரும் காட்சிகள் தியேட்டரில் ரசிகர்களிடம் கூஸ்பம்ப்ஸை ஏற்படுத்த இந்த படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
இரண்டாம் பாகத்திலும் பஞ்சுருளி தெய்வமாக ரிசப் ஷெட்டி சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளும், VFX காட்சிகளும் ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகிறது. படம் வெளியான முதல் நாளே இப்படம் 50 கோடி வசூலை தாண்டியது. படம் வெளியாகி 5 நாட்களில் இப்படம் 300 கோடி வசூலை தாண்டி விட்டது.
செவ்வாய்க்கிழமையான நேற்று இப்படம் இந்தியாவில் மட்டும் 33.5 கோடி வசூல் செய்திருக்கிறது. மொத்தத்தில் ஆறு நாட்களில் இந்தியாவில் மட்டும் இப்படம் 300 கோடி வசூலையும், உலக அளவில் 400 கோடி வசூலையும் தாண்டி இருக்கிறது. இரண்டு நாட்களில் இப்படம் 500 கோடி வசூலை தாண்டி விடும் என்கிறார்கள்.காந்தாரா 2 படத்தின் வெற்றியை கன்னட திரை உலகமே கொண்டாடி வருகிறது.