Saroja devi: 1960-70 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சரோஜினி தேவி. எம்.ஜி.ஆருடன் 26 படங்களிலும், சிவாஜியுடன் 22 படங்களிலும் ஜோடி போட்டு நடித்தவர். கன்னடத்தை சேர்ந்த இவர் 1950களில் சினிமாவில் நடிக்க துவங்கியவர். எம்.ஜி.ஆர் இவரை தனது நாடோடி மன்னன் படத்தில் நடிக்க வைத்தார்.
அதன்பின் தொடர்ந்து பல படங்களிலுநம் நடித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமில்லாமல் ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். இவரின் தாய் மொழி கன்னடம் என்பதால் தமிழை கொஞ்சி கொஞ்சி பேசுவார். இவர் பேசும் ஸ்டைலே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
சிவாஜியுடன் பல நல்ல கதையம்சம் கொண்ட குடும்ப படங்களில் நடித்திருக்கிறார். அன்பே வா, படகோட்டி, புதிய பறவை என இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் ரசிகர்களுக்கு ஃபேவரைட்டாக இருக்கிறது. கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என இவருக்கு பல பட்டப்பெயர்களும் இருக்கிறது. நிறைய கன்னட மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.
கடைசியாக சூர்யா நடித்த ஆதவன் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் அவர் சினிமாவில் நடிக்கவில்லை. பெங்களூரில் தங்கியிருந்த சரோஜினி தேவி கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்தான் தற்போது அவர் மரணமடைந்திருக்கிறார். அவரின் மரணத்திற்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வயது 87.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…