தப்பு பண்ணிட்டேன்!.. வீட்ல பிரச்சனை இருக்கு!. நீதிபதியிடம் கெஞ்சிய ஸ்ரீகாந்த்.....

by MURUGAN |
srikanth
X

Srikanth: போதை மருந்து பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றிருப்பது கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ரோஜாக்கூட்டம், பம்பரக்கண்ணாலே, பார்த்திபன் கனவு, மனசெல்லாம், நண்பன் உள்ளிட்ட பல படங்களிலும் ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார். நடிக்க வந்த புதிதில் நடிகை சினேகாவுடன் சில படங்களில் நடித்தார்.

இருவருக்கும் இடையே காதல் என்று கூட கிசுகிசுக்கள் வெளியானது. ஆனால், இருவரும் அதை மறுத்தனர். வந்தனா என்கிற பெண்ணை காதலித்து அதை ஸ்ரீகாந்த் வீட்டில் ஏற்கவில்லை. எனவே, ஸ்ரீகாந்தும் மனதை மாற்றிக்கொள்ள வந்தனா ஸ்ரீகாந்தின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தி ஸ்ரீகாந்தை கரம் பிடித்தார்.

ஸ்ரீகாந்துக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். தமிழில் ஸ்ரீகாந்துக்கு பெரிய வாய்ப்புகள் இல்லையென்றாலும் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில்தான் கொக்கைன் எனும் போதைப்பொருளை உட்கொண்டது நிரூபிக்கப்பட்டு சிறைக்கு போயிருக்கிறார்.


சென்னையில் கொக்கைன் போதைப்பொருளை சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்த போதுதான் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சில சினிமா பிரபலஙக்ளுக்கு அவர் போதைப்பொருள் சப்ளை செய்தது தெரியவந்திருக்கிறது. இதில், நடிகர் கிருஷ்ணாவையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்யப்பட்டு அவருக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், சிறையில் இருக்கும் ஸ்ரீகாந்த் ‘நான் தெரியாமல் தவறு செய்துவிட்டேன். நான் போதைப்பொருளை பயன்படுத்தியது உண்மை. ஆனால்,யாருக்கும் சப்ளை செய்தது இல்லை. என் மகனை நான் கவனித்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் பிரச்சனை இருக்கிறது’ என சொல்லி ஜாமீன் கேட்டிருக்கிறார். ஆனால், அதை நிராகரித்த நீதிபதி ‘போதைப்பொருள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீங்கள் ஜாமின் பெறலாம்’ என சொல்லிவிட்டார். எனவே, சிறப்பு நீதிமன்றத்தில் விரைவில் ஸ்ரீகாந்த் ஜாமினுக்கு விண்ணப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஒன்றரை வருடங்களாக ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருளை பயன்படுத்தி வந்திருக்கிறார். இதற்காக நட்சத்திர விடுதிகளில் நடக்கும் கேளிக்கை விருந்துகளுக்கு ஸ்ரீகாந்த் தொடர்ந்து சென்றிருக்கிறார். குறிப்பாக நுங்கம்பக்கம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இவர் கொக்கைன் போதைப்பொருளை அதிகம் உட்கொண்டது தெரியவந்திருக்கிறது.

Next Story