சிவகார்த்திகேயனை நம்பி எல்லாம் போச்சே!.. புலம்பும் ஹிட் பட இயக்குனர்!..

by MURUGAN |
sk
X

Sivakarthikeyan: அமரன் ஹிட் மூலம் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் மதிப்பு அதிகரித்திருக்கிறது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்து சாதனை செய்தது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த இந்த திரைப்படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகள் தாக்கியதில் உயிரிழந்த முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த படத்திற்கு பின் தனது சம்பளத்தை 70 கோடியாக உயர்த்திவிட்டதாக சொல்லப்பட்டது. அதோடு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்கிற படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடிக்க துவங்கினார். இதில், பராசக்தி படம் 1960களில் தமிழகத்தில் நடந்த இந்தி திணிப்பு போராட்டம் பற்றிய கதை என சொல்லப்படுகிறது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, சிவகார்த்திகேயன் மதராஸி படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் நிலையில் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவிருக்கிறது. இந்த இரண்டு படங்களும் முடிந்த பின் சிவகார்த்திகேயன் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


ஒருபக்கம் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மீண்டும் ஒரு படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், இப்போது வரை டேக் ஆப் ஆகவில்லை. சிவகார்த்திகேயனுக்காக 3 வருடங்கள் காத்திருந்த சிபி இந்த படமே வேண்டாம் என சொல்லிவிட்டு தெலுங்கு சினிமாவுக்கு சென்று நானி நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது.

அதற்கு காரணம் சிபி எழுதிய கதையில் சிவகார்த்திகேயன் நிறைய மாற்றங்களை சொன்னதாக சொல்லப்படுகிறது., இதனால் கடுப்பான சிபி தெலுங்கு சினிமா பக்கம் போயிருக்கிறார். ஆனால், சோகம் என்னவெனில் அந்த படமும் டிராப் ஆகிவிட்டது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்து இப்போது அது நடக்காமல் போய்விட்டது.

சிவகார்த்திகேயனை நம்பி 3 வருடங்கள் வீணாய் போனதோடு இப்போது நானி படமும் நடக்காமல் போய்விட்டதால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் சிபி சக்ரவர்த்தி. ஏற்கனவே ரஜினிக்கும் இவர் ஒரு கதை தயார் செய்து அது நடக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.


Next Story