ஷங்கரை நம்பி என் காசெல்லாம் போச்சி!.. புலம்பும் கேம் சேஞர் புரடியூசர்!...

by MURUGAN |
ஷங்கரை நம்பி என் காசெல்லாம் போச்சி!.. புலம்பும் கேம் சேஞர் புரடியூசர்!...
X

Director shankar: தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட் படங்கள் என்கிற கான்செப்ட்டை கொண்டு வந்தவர் ஷங்கர். ஒருகட்டத்தில் அதுவே அவரின் ஸ்டைலாக மாறி அவரே நினைத்தாலும் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்க முடியாது என்கிற நிலையும் உருவானது. ஜீன்ஸ் படத்தில் உலகின் ஏழு அதிசயங்களையும் ஒரு பாட்டில் காட்டினார். ரசிகர்களுக்கு அது ட்ரீட்தான் என்றாலும் படம் வசூலை பெறவில்லையெனில் தயாரிப்பாளருக்கு கடும் நஷ்டம்தான்.

ஷங்கருக்கு ஒரு பழக்கம் உண்டு. அதிக பட்ஜெட், அதுவும் சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடிக்கமாட்டார். அதற்கும் மேல் பல கோடிகள் செலவு செய்வார். இவ்வளவு நாளில் படத்தை முடித்துவிடுவேன் என சொல்ல மாட்டார். அவர் நினைக்கும் வரை எடுத்துக்கொண்டே இருப்பார். அப்படி படத்தை முடித்த பின்னரும் படத்தை தயாரிப்பாளருக்கு போட்டு காட்டமாட்டார். இதையெல்லொம் அவர் பல வருடங்களாக பின்பற்றி வருகிறார்.

அதனால்தான் அவர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்திற்கு மேல் நடக்கும். துவக்கத்தில் ஜென்டில்மேன், காதலன், இந்தியன் என ஹிட் படங்களை கொடுத்தாலும் ஒருகட்டத்தில் இவரின் படங்கள் தோல்வியை பெற்று தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுக்க துவங்கியது. பாய்ஸ், ஐ, இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

இதில் கேம் சேஞ்சர் படத்தை தெலுங்கில் பெரிய தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜூ தயாரித்தார். ராம் சரண் ஹீரோவாக நடித்திருந்தார். தில் ராஜு வசமாக சிக்கியதால் 186 கோடி செலவில் அப்படத்தை எடுத்தார். இதில் 5 பாடல்களுக்கு மட்டுமே 75 கோடிக்கும் மேல் செலவு செய்தார் ஷங்கர்.


அப்படி வெளியான கேம் சேஞ்சர் ரசிகர்களை கவரவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது. இந்த படத்தில் தில் ராஜுவுக்கு 100 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டது. இந்த படத்தின் முழு தோல்விக்கும் ஷங்கர் மட்டுமே காரணமாக இருந்தார்.

இந்நிலையில ஊடகம் ஒன்றில் பேசிய தில் ராஜூ ‘என் கெரியரில் ஷங்கர் போன்ற ஒரு இயக்குனருடன் நான் வேலை பார்த்ததே இல்லை. கேம் சேஞ்சர் நான் செய்த முதல் தவறு. எனக்கு தேவையானவற்றை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபின் தயாரிப்பை தொடங்கியிருக்க வேண்டும். அதை செய்யாதது என் தவறுதான்’ என சொல்லியிருக்கிறார்.

Next Story