இது கஷ்டமா இருக்கேன்னு நீங்களே ஃபீல் பண்ண பாட்டு எது?!.. இளையராஜா சொன்ன பதில்!..

by MURUGAN |
ilayaraja
X

Ilayaraja: தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்கிற ஆசையில் தனது சகோதரர்களுடன் சென்னை வந்து வாய்ப்பு தேடிய இவர். வாய்ப்பு தேடுவதற்கு முன் சில இசையமைப்பாளர்களிடம் இளையராஜா வேலையும் செய்திருக்கிறார்.

ஒருபக்கம் சிலரிடம் சினிமா இசையையும் கற்றுக்கொண்டார். இனிமேல் இசையமைக்கலாம் என்கிற நம்பிக்கை வந்த பின்னரே அவர் வாய்ப்பு தேடினார். அப்போது எம்.எஸ்.விஸ்வநாதன் பல படங்களுக்கும் இசையமைத்துகொண்டிருந்தார். எனவே, புதிதாக ஒருவரை நம்பி எப்படி இசையமைக்க வாய்ப்பை கொடுக்க முடியும்?. பாடல்கள் சரியாக அமையாமல் படம் தோல்வி அடைந்தால் என்னாவது? என்கிற பயத்தில் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ராஜாவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

அப்போது பிரபல தயாரிப்பாளரும், கதாசிரியராகவும் இருந்த பஞ்சு அருணாச்சலம்தான் ராஜாவை நம்பி வாய்ப்பு கொடுத்தார். அப்படி ராஜா இசையமைத்த அன்னக்கிளி திரைப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் இளையராஜாவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானது.


80களில் தமிழ் சினிமாவே இளையராஜாவின் இசையை நம்பி இருந்தது. அவர் பாட்டு போட்டால் படம் ஹிட் என்கிற நிலையும் உருவானது. அதோடு, பின்னணி இசையிலும் அசத்தினார் ராஜா. அவரின் பாடல்கள் பலரின் மனக்காயங்களுக்கும் மருந்தாகவும், ஆறுதலாகவும் மாறியது. 70,80களில் பிறந்தவர்கள் இப்போதும் ராஜாவின் தீவிர ரசிகர்களாகவே இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட இளையராஜா சமீபத்தில் தனது 82வது வயது பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் தீவிர ரசிகர்கள் பலரும் நேரில் வந்து அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். அப்போது சில ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு இளையராஜாவும் பதில் கூறினார். ஒரு ரசிகை ‘நீங்கள் உருவாக்கிய பல பாடல்களை பாட பாடகர்கள் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், பாடலை உருவாக்கும்போதே ‘இந்த பாடல் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே’ என ஏதேனும் ஒரு பாடல் உங்களை யோசிக்க வைத்திருக்கிறதா?’ எனக்கேட்டார். அதற்கு ‘அப்படி எதுவுமில்லை’ என வெறும் சைகையாலே பதில் சொன்னார் இளையராஜா.

Next Story