மீண்டும் லவ் ஸ்டோரி!.. மணிரத்னம் - சிம்பு படத்தில் இன்னொரு ஹீரோ?!.. பரபர அப்டேட்!..

by MURUGAN |
மீண்டும் லவ் ஸ்டோரி!.. மணிரத்னம் - சிம்பு படத்தில் இன்னொரு ஹீரோ?!.. பரபர அப்டேட்!..
X

Manirathnam simbu: இந்திய சினிமா உலகில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுபவர் மணிரத்னம். தீவிரவாதம், மத பிரிவினைகள், இன்றைய இளசுகளின் காதல் வாழ்க்கை, கேங்ஸ்டர்களின் உலகம் என தன்னுடைய படங்களில் பல விஷயங்களை அலசி இருக்கிறார். ரோஜா, நாயகன், தளபதி, பம்பாய், இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், உயிரே, அலைபாயுதே, ஓகே கண்மணி என ரசிகர்களுக்கு புதிய அனுபவங்களை கொடுத்தவர் இவர்.

இப்போது கமல் - சிம்புவை வைத்து தக்லைப் படத்தை இயக்கி முடித்து இப்படம் வருகிற ஜூன் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படமும் கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள ஒரு கதைதான். இந்த படத்தில் திரிஷா, அபிராமி, நாசர் போன்றவர்களும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

இந்த படத்திற்காக கடந்த பல நாட்களாகவே புரமோஷன் வேலைகள் நடந்து வந்தது, கமல், மணிரதனம் இருவரும் பல ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்தார்கள். சிம்புவுக்கு இப்படம் ஒரு முக்கிய படமாக அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. சிம்பு ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தார். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் அவருக்கு இது இரண்டாவது படம்.



இந்நிலையில், மணிரத்னம் அடுத்து ஒரு காதல் கதையை இயக்கப்போவதாகவும் அதில் புதுமுக நடிகர்கள் நடிக்கபோவதாகவும் செய்திகள் வெளியானது. இதுபற்றி மணிரத்னத்திடமே கேட்டதற்கு ‘அது இன்னும் முடிவாகவில்லை. எனக்கு சில ஐடியாக்கள் இருக்கிறது என சொன்னார்’.

ஒருபக்கம் மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் ஓடிகொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு, இந்த படத்தை சிம்புவே தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. அதோடு, இந்த படமும் ஒரு மல்டி ஸ்டார் என படம் எனவும், இதில் ஒரு தெலுங்கு நடிகரும் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. தக் லை படத்திற்கு பின் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story