ஓவர் சீன்!. எதிர்காலத்துல லிட்டில் சூப்பர்ஸ்டார்!.. ட்ரோலில் சிக்கிய விஜய் சேதுபதி மகன்!..

Suriya Vijay sethupathi: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. வித்தியாசமான கதைகளில் இயல்பாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் இவர். பீசா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற படங்கள் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து கோலிவுட்டின் முக்கிய நடிகராக மாறிவிட்டார்.
இப்போது அவரின் சூர்யாவும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் படத்தில் இவர் நடித்திருந்தார். அப்போது சிறுவனாக இருந்த அவர் இப்போது மீசையெல்லாம் முளைத்து ஹீரோவாகி விட்டார். பீனிக்ஸ் என்கிற திரைப்படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார்.
இந்த படத்தை அனல் அரசு இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வருகிற 4ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்த படம் உருவாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அது நடக்கவில்லை.
அப்போது ஒரு மேடையில் பேசிய சூர்யா விஜய் சேதுபதி ‘ அப்பா வேற.. நான் வேற’ என பேசியது ட்ரோலில் சிக்கியது. இப்போது படம் வெளியாகவுள்ள நிலையில் மீண்டும் ட்ரோலில் சிக்கியிருக்கிறார் சூர்யா. சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில், அவரின் அப்பா விஜய் சேதுபதியும் கலந்துகொண்டார்.
அப்போது ரசிகர்கள் சிலர் சூர்யாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் இணையத்தில் வெளியானது. சூர்யா மிகவும் சீன் போடுகிறார், பபிள்கம் மென்று கொண்டு தெனாவட்டாக பேசுகிறார்.. ஓவர் ஆட்டிட்டியூட் காட்டுகிறார் என்றெல்லாம் பேச துவங்கிவிட்டனர்.
புளுசட்ட மாறனுன் தன் பங்குக்கு நக்கலடித்து வருகிறார். ஒருபக்கம், விஜய் சேதுபதியை பிடிக்காத ஒரு குரூப்பும் சூர்யாவுக்கு எதிராக பேசி வருகிறார்கள்.