2 சூப்பர்ஸ்டார் ஒரே படத்துலயா!..ஜெயிலர் 2-வில் அந்த நடிகர்!.. ஃபுல் ட்ரீட் இருக்கு!..

Jailer 2: இப்போதெல்லாம் 500 அல்லது 1000 கோடிக்கும் மேல் வசூலை அள்ள பேன் இண்டியா என்கிற கான்செப்ட் வந்துவிட்டது. அதாவது. ஒரு படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய எல்லா மொழிகளிலும் டப் செய்து வெளியிடுவார்கள். குறைந்தபட்சம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் டப் செய்கிறார்கள். ராஜமவுலியின் பாகுபலி, பாகுபலி 2, புஷ்பா, புஷ்பா 2, கேஜிஎப், கேஜிஎப் 2, காந்தாரா, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் அப்படி வெளியாகி வசூலை அள்ளியது.
இதில் பாகுபலி 2, புஷ்பா 2, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் 1000 கோடி வசூலை தாண்டியது. எனவே, பெரிய நடிகர்கள் எல்லோருக்கும் தங்களின் படம் பேன் இண்டியா படமாக வரவேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று பல நூறு கோடி வசூல் செய்வதால் நடிகர்களின் சம்பளம் உயர்ந்துவிடும். இரண்டாவது எல்லா மொழி ரசிகர்களிடம் தான் ரீச் ஆக முடியும் என நடிகர்கள் நினைக்கிறார்கள்.
எனவே, தங்களின் படங்களில் எல்லா மொழிகளிலும் உள்ள பெரிய நடிகர்களை அழைத்து கேமியோ வேடத்தில் நடிக்க வைக்கிறார்கள். மேலும், ஹிந்தியிலும் படம் ஒட வேண்டும் என்பதாக ஹிந்தி நடிகரை வில்லனாக நடிக்க வைக்கிறார்கள். அதனால்தான் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நிறைய தமிழ் படங்களில் வில்லன் நடிகராகிவிட்டார்.
வேட்டையன் படத்தில் அமிதாப்பச்சன், லியோ படத்தில் சஞ்சய் தத், ஜெயிலர் படத்தில் சிவ் ராஜ்குமார், மோகன்லால் ஆகியோரையெல்லாம் நடிக்க வைத்தது இதனால்தான். சிவ்ராஜ்குமாரும், மோகன்லாலும் கேமியோ வேடத்தில் நடித்த ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்து 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
பொதுவாக ரஜினி தன்னுடைய படங்களில் வேறு எந்த பெரிய நடிகரையும் நடிக்க அனுமதிக்கமாட்டார். அது தன்னுடைய படமாக மட்டுமே இருக்க வேண்டும் என நினைப்பார். ஆனால், இப்போது அவரும் மாறிவிட்டார். இந்நிலையில்தான் இப்போது உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கானை கேமியோ வேடத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம்.
ஏற்கனவே கூலி படத்தில் அமீர்கான் கேமியோ பண்ணியிருக்க, இப்போது ஜெயிலர் 2-வுக்காக ஷாருக்கானிடம் பேசி வருகிறார்கள். அவர் என்ன சம்பளம் கேட்டாலும் கொடுத்துவிட சன் பிக்சர்ஸ் நிறுவனமும் தயாராக இருக்கிறது. ரஜினி மீது உள்ள மரியாதையில் ஷாருக்கானும் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கு நடிகர் பாலையா இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார். மொத்தத்தில் ஜெயிலர் 2 படம் ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்டாக அமையும் என கணிக்கப்படுகிறது.