STR-49 படத்தை இயக்கப்போவது இவரா?!.. தேசிய விருதை வாங்குவாரா சிம்பு?..!

STR 49: தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக இருப்பவர் சிம்பு. அதேநேரம் அடிக்கடி பிரச்சனைகளில் சிக்கி சினிமாவில் தொடர்ந்து நடிக்காமல் இருப்பார். கால்ஷிட் பிரச்சனையும் கொடுப்பார். தயாரிப்பாளர்களுடன் இவருக்கு பிரச்சனை ஏற்படும். ஷூட்டிங்கிற்கு சரியாக போகாமல் குடைச்சல் கொடுப்பார். இவர் மீது தயாரிப்பாளர்கள் சிலர் கொடுத்த புகார் இன்னமும் தயாரிப்பாளர் சங்கத்தில் நிலுவையில் இருக்கிறது.
அதேநேரம் 2 வருடங்களுக்கு ஒரு ஹிட் கொடுத்துவிடுவார். அதனால் இன்னமும் நடிகராக பொழப்பை ஓட்டி வருகிறார். திடீரென விண்ணை தாண்டி வருவாயா ஹிட் கொடுத்தார். அதன்பின் சில வருடங்கள் கழித்து மாநாடு கொடுத்தார். அதோடு சரி, அதன்பின் வெளியான வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை.
இந்த படத்தில் நடித்துகொண்டிருக்கும் போதே தனது அடுத்த 3 படங்களின் அறிவிப்பை வெளியிட்டார். STR 49 படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமாரும், STR 50 படத்தை தேசிங்கு பெரியசாமியும், STR 51 படத்தை டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் இயக்குவதாக அறிவித்தார்கள்.
இதில், STR 49 படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அமலாக்கத்துறை சோதனையில் அந்த நிறுவனம் சிக்கியிருப்பதால் படத்தின் வேலைகள் துவங்கப்படவில்லை. எனவே, இந்த படத்தை வேறொரு தயாரிப்பாளரை வைத்து எடுக்கலாம் என்கிற முடிவில் சிம்பு இருக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கலைப்புலி தாணு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தது. ஆனால், அறிவிப்பு வெளியாகி சில வருடங்கள் ஆகியும் அது டேக் ஆப் ஆகவில்லை. எனவேதான், சிம்புவை வைத்து ஒரு புதிய படத்தை துவங்கவிருக்கிறார்கள். இது வேறு கதை என சொல்லப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்தால் அவருக்கு தேசிய விருது கிடைக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒருபக்கம், இப்போது வெளியாகியுள்ள தக் லைப் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. சிம்பு நன்றாக நடித்திருந்தாலும் படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கவில்லை என சொல்லப்படுகிறது.