வேறலெவல் லுக்கில் சிம்பு!. அட நெல்சனும் இருக்காரே!.. வெற்றிமாறன் ஷூட்டிங் ஸ்பாட் பிக்சர் லீக்!...

by MURUGAN |
simbu
X

Vetrimaran simbu: விடுதலை 2 படத்திற்கு பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால், அது நடக்காமல் போகவே உடனடியாக சிம்புவை வைத்து ஒரு படத்தை துவங்கிவிட்டார். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். வாடிவாசல் படத்தை இவரே தயாரிப்பதாக இருந்தது.

ஆனால், அறிவிப்பு வெளியாகி 4 வருடங்கள் ஆகியும் வாடிவாசல் டேக் ஆப் ஆகவில்லை என்பதால் தாணுவுக்காக சிம்பு படத்தை துவங்கிவிட்டார் வெற்றிமாறன். இது வட சென்னை தொடர்பான கதை என்கிறார்கள். ஏற்கனவே தனுஷை வைத்து வட சென்னை படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எப்போது எடுப்பீர்கள் என பல வருடங்களாகவே ரசிகர்கள் வெற்றிமாறனிடமும், தனுஷுடமும் கேட்டு வந்தார்கள். குபேரா பட புரமோஷன் விழாவில் பேசிய தனுஷ் ‘வட சென்னை அடுத்த வருடம் துவங்கும்’ என சொன்னார். இந்நிலையில்தான் சிம்புவை இயக்க வந்துவிட்டார் வெற்றிமாறன்.

துவக்கத்தில் இது வட சென்னை 2 என்றே செய்திகள் வெளியானது. ஆனால், இது வேறு கதை என தெரிய வந்திருக்கிறது. கருணாஸின் மகன் கென் கருணாஸுக்காக வட சென்னை 2-விலிருந்து வெற்றிமாறன் உருவாக்கிய ராஜன் வகையறா கதை என்கிறார்கள். அதை சிம்புவுக்காக சில மாற்றங்கள் செய்து இப்போது ஷுட்டிங்கும் துவங்கிவிட்டது.


வாடிவாசல் படத்திற்காக பேசப்பட்ட சம்பளம் எல்லாவற்றையும் கலைப்புலி தாணுவிடமிருந்து வெற்றிமாறன் ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிவிட்டாராம். எனவே, இந்த படத்தை மிகவும் வேகமாக முடித்துகொடுக்க வேண்டிய நிலையில் வெற்றிமாறன் இருக்கிறார். மேலும், சிம்புவும் இந்த படத்தை விரைவாக முடிக்க ஆசைப்படுகிறார்.


இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் சிம்புவின் அருகில் இயக்குனர் நெல்சனும் இருக்கிறார். எனவே, இந்த படத்தில் நெல்சன் நடிக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. கடந்த சில வருடங்களாக நீண்ட தலைமுடியுடன் இருந்த சிம்பு இந்த படத்திற்காக முடியை வெட்டி வேறு தோற்றத்துக்கு மாறியிருக்கிறார்.

Next Story