More
Categories: Cinema News latest news

நீ பண்ணதே போதும்!.. கேப்டன் மில்லர் இயக்குனரிடம் கடுப்படித்த தயாரிப்பு நிறுவனம்!..

Captain miller: தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் ஜனவரி 12ந் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் படத்தின் இயக்குனர் மீது தனுஷும், தயாரிப்பு நிர்வாகமும் கடுப்பில் இருக்கிறதாம். இதுகுறித்த சில சுவாரஸ்ய தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இப்படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் ரிலீஸான நிலையில் ட்ரைலர் இன்று வெளியாக இருக்கிறது.

இதையும் படிங்க: மீனாவிடம் அலப்பறையை கூட்டிய விஜயா!.. மனோஜின் சேட்டையை கண்டுப்பிடித்த முத்து!

இந்நிலையில் இப்படத்தின் காட்சிகள் கணக்கே இல்லாமல் இயக்குனர் ஷூட் செய்து வைத்து இருக்கிறாராம். அதை கண்டிப்பாக ஒரு பாகமாக மட்டும் ரிலீஸ் செய்யவே முடியாதாம். ஒரு திட்டமிடல் இல்லாமல் அவர் செய்ததால் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறதாம்.

சரி இப்போதைய ட்ரெண்ட் செட்டில் இதை இரண்டு பாகமாக ரிலீஸ் செய்யலாம் என இயக்குனர் கேட்க தயாரிப்பு நிர்வாகம் அதுக்கு இன்னும் நிறைய ஷூட்டிங் நடத்த வேண்டும். அது முதல் பாகத்தின் ரிலீஸை கெடுக்கும். அதனால் முதலில் இந்த படத்தினை பொங்கலில் ரிலீஸ் செய்வோம்.

இதையும் படிங்க: கலைஞர் விழாவில் கருணாநிதியாக நடிக்க இருப்பது இந்த நடிகரின் மகனா? அச்சு அசல் அப்படியே இருக்கே

Published by
Akhilan

Recent Posts