நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 27 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகும் போட்டியாளர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே தெரிந்து விடுகின்றன. மறுபுறம் நிகழ்ச்சியின் டிஆர்பியை தக்க வைக்கும் அளவிற்கு போட்டியாளர்கள் யாரும் இன்னும் கேமிற்குள் வரவில்லை.
தற்போதைய சூழ்நிலையில் முத்துக்குமரன், ஜாக்குலின் என ஆண்கள் அணியில் ஒருவரும் பெண்கள் அணியில் ஒருவரும் மட்டுமே பிக்பாஸிற்கு ஓரளவாவது கண்டெண்ட் அளிக்கின்றனர். இதனால் நொந்து போன பிக்பாஸ் மொத்தமாக ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்களை இறக்கி இருக்கிறார்.
இவர்கள் நாளை நிகழ்ச்சிக்கும் என்ட்ரி ஆவார்கள் என தெரிகிறது. இந்த சூழ்நிலையில் இந்த சீசனின் டைட்டிலை வெல்ல முத்துகுமரனுக்கு அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை நடந்த ஏழு சீசன்களிலும் ஆங்கிலத்தில் ARM என்ற வரிசையில் ஆரம்பிக்கும் நபர்கள் டைட்டில் வென்றுள்ளனர். இது தொடர வேண்டும் என்றால் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே செல்ல இருக்கும் ரானவ், ராயன் இருவரில் ஒருவரை டைட்டிலை வெல்ல வேண்டும்.
ஆனால் அர்ச்சனா போல வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்து டைட்டிலை வெல்லக்கூடிய அளவிற்கு மேற்கண்ட இருவரும் கண்டெண்ட் அளிப்பார்களா? என்பது தெரியவில்லை. எனவே நாம் சற்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…