விஜய்சேதுபதி கிட்ட கேள்வி கேட்டா? பிக்பாஸ் சீசன் 8 பற்றி வனிதா சரவெடி

மிகப்பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன். கடந்த ஏழு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். விஜய்சேதுபதியின் பேச்சு, தோற்றம் என பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செட் ஆகுமா என்ற ஒரு பயம் அனைவர் மத்தியிலும் இருந்துவந்தது.

ஆனால் அதை எல்லாவற்றையும் முதல் நாளிலேயே சுக்கு நூறாக்கி விட்டார் விஜய்சேதுபதி. போட்டியாளர்களை தன்னுடைய எதார்த்தமான பேச்சால் மடக்கி கதறவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு உதாரணமாக நடிகர் ரஞ்சித்தை வருத்தப்பட வைத்த நிகழ்வை கூறலாம். சாதி வெறியோடு ஒரு கட்டத்தில் பேசிய ரஞ்சித் இப்போது அதை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன் என்று சொல்லுமளவுக்கு விஜய்சேதுபதி மாற்றினார்.

இந்த நிலையில் இந்த எட்டாவது சீசன் கமல் இல்லாமல் எப்படி இருக்கப் போகிறதோ என்ற அச்சம் அனைவருக்கும் இருந்த நிலையில் அதை மாற்றி விஜய்சேதுபதி இன்னும் எப்படியெல்லாம் பேசப் போகிறார்? எந்தளவுக்கு போட்டியாளர்களை கையாளப் போகிறார் என்ற ஆர்வத்தை ரசிகர்களிடம் விதைத்திருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை வனிதா விஜய்சேதுபதி பற்றியும் பிக்பாஸ் சீசன் 8 பற்றியும் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது விஜய்சேதுபதி கிட்ட கேள்வி கேட்டால் பதில் வரும். அதே மாதிரி நம்மையும் அவர் கேள்வி கேட்பாரு. உண்மையை சொல்லனும்னா விஜய்சேதுபதி ஒரு எதார்த்தமான மனிதர்.

இன்றைக்கும் இந்த நேரத்துல என்ன சொல்லனும்னு தெரிந்து வைத்திருப்பார் விஜய்சேதுபதி. ஒரு டெக்னீசியனாகத்தான் விஜய்சேதுபதியை நான் பார்க்கிறேன். சேது ஒரு நல்ல ஃபிரண்ட். அவருடைய யோசிக்கும் தன்மையே ஒரு டிரெண்டிங்தான். அவர் பண்ணும் கேரக்டரும் சரி படங்களும் சரி நம்மால் அதை தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். அதனால்தான் சொல்றேன் இந்த சீசன் கண்டிப்பாக பெரிய அளவில் இருக்கும் என வனிதா கூறியிருக்கிறார்.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it