மனைவியுடன் கருத்து வேறுபாடு.. பெண்கள் விஷயத்தில் வீக்! பாரதிராஜாவை பொளந்து எடுத்த பிரபலம்

bharathi
Bharathiraja:இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் சமீபத்தில் இவ்வுலகை விட்டு மறைந்தார். அந்த செய்தி திரையுலகை பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மாரடைப்பு காரணமாக மனோஜ் பாரதிராஜா காலமானது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் பாரதிராஜாவை பற்றி பிரபல மூத்த தயாரிப்பாளர் சேகுவரா ஒரு பேட்டியில் அவருடைய கருத்துக்களை கூறியிருக்கிறார். கணவன் மனைவிக்கு இடையேயான உறவு என்பது காலம் காலமாக நிலைத்து நிற்க வேண்டும் .கருத்து வேறுபாடு இல்லாத கணவன் மனைவி உறவு என்பது கிடையவே கிடையாது.
உரசல் வரத்தான் செய்யும். ஆனால் அது வயதை பொறுத்து அந்த பிரச்சினையை அவ்வப்போது தீர்த்துக் கொள்ள வேண்டும். இதே பிரச்சினை 60 வயதுக்கு மேல் வந்தால் உடனே பேசி எதிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மரணம் என்பது 60 வயதிற்கு மேல் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் . அதனால் இந்த வயதில் பிரச்சினையே வரக்கூடாது. ஏனெனில் உங்களை பார்த்து உங்களுடைய பிள்ளை, மருமகள் என அவர்களும் ஒற்றுமையாக இருப்பார்கள். இதுதான் வழி காட்டுதல். 70 வயதில் கணவன் மனைவி சண்டை போட்டு ஒருத்தர் பொண்ணு வீட்டிலும் இன்னொருத்தர் தன் மகன் வீட்டிலும் இருந்தால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடும்.
அதனால் கணவன் மனைவி உறவு என்பது போறப்போக்கில் சொல்கிற விஷயம் கிடையாது. மிகவும் ஆழமான ஒரு விஷயம். இப்போது பாரதிராஜா விஷயத்தில் கடைசி காலத்தில் மனைவியுடன் கருத்து வேறுபாட்டில் தனியாக இருந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது பிள்ளைக்கு ஆறுதல் சொல்வது யாரு. இப்போ மனோஜுக்கு ஆதரவு யாரு. இந்த வயதில் நீங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் மனோஜுக்கு ஒரு தைரியத்தை கொடுக்கும். இரண்டு பேரும் ஒற்றுமையாக காரில் கிளம்பி போய் மனோஜுக்கு ஆதரவு சொன்னால்தான் அது அவருக்கு பலம்.
நீங்கள் பணம் காசு கொடுத்து விட்டேன். சொத்து கொடுத்துட்டேன். நீலாங்கரையில் ஒரு வீடு கொடுத்து விட்டேன். அதெல்லாம் உயிரை காப்பாற்றாது. யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நான் சொல்லவில்லை. எல்லோருக்கும் தான் சொல்கிறேன். பாரதிராஜாவுக்கு மட்டும் நான் சொல்லவில்லை. நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் அடுத்த தலைமுறைக்கு அது ஒரு பலம். மனோஜுக்கு ஒரு மன அமைதி தேவைப்பட்டது. ஆறுதல் சொல்ல ஒரு ஆள் தேவைப்பட்டது .உங்களுக்குள் இவ்வளவு பிரச்சினையை வைத்துக்கொண்டு இருந்தால் அவருக்கு யார் ஆறுதல் .

அண்ணன் தம்பிகளிடம் ஆதரவை தேட முடியாது. பெற்றவர்களிடம் தான் ஆதரவு தேட முடியும். அப்படி ஒரு மன அழுத்தம் தான் மனோஜுக்கு. ஒரு காலத்தில் ஒட்டு மொத்த பெண் சமுதாயமும் பாரதிராஜாவை தலையில் வைத்து கொண்டாடினார்கள். ஏனெனில் கருத்தம்மா என்ற ஒரு படம் எடுத்தார். 90களில் பெண் சிசுக்கொலை சர்வசாதாரணமாக நடந்தது .அப்படி நடந்த சமயத்தில் அந்த விஷயத்தை உடைத்து தூள் தூளாக்கியவர் பாரதிராஜா .அந்த மாதிரி படைப்பை நீங்கள் பார்க்கவே முடியாது. அதில் பட்ஜெட் என்பதே ஒன்றும் கிடையாது.
யாருமே பார்த்த முகங்களும் கிடையாது. அந்தப் படம் பார்த்த பிறகு பெண் பிள்ளைகள் மீது ஒரு தனி பாசமே பிறந்தது. அந்த மாதிரி ஒரு படைப்பை கொடுத்தவர் பாரதிராஜா. ஆனால் பெண்கள் விஷயத்தில் இவர் கொஞ்சம் டேமேஜ் தான். மிகச் சிறந்த ஆளுமை. யாருமே ஒப்பிட முடியாத படைப்புகளை கொடுத்திருக்கிறார் .ஆனால் ஒரு இயக்குனராக சினிமாவில் நடிகைகளுக்கு வாய்ப்புகளை கொடுக்கும் பொழுது அவருடைய நடத்தை குறித்து சில விமர்சனங்கள் இருக்கின்றது. நடிகைகளை தேர்வு செய்யும் முறை ,அவர்களை நடிக்க வைக்கும் முறை ,சினிமாவில் பயன்படுத்தும் முறை திரை மறைவுக்கு பின்னாடி பல விமர்சனங்கள் வந்தது என சேகுவரா கூறியிருக்கிறார்.