Categories: latest news

இந்திய சினிமாவிலேயே இப்படி ஒரு fight யாரும் பார்த்திருக்க மாட்டாங்க… கங்குவா படத்தில் ஒரு தரமான சம்பவம் இருக்கு…

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்து பிரபல பத்திரிகையாளர் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக எடுத்து வந்தனர். சமீபத்தில் தான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இப்படத்திற்கு முன்னதாக சூர்யா எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

அதைத்தொடர்ந்து பாலாவின் வணங்கான் திரைப்படத்தில் இணைந்து நடித்து வந்தார். பிறகு அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார். வணங்கான் படத்திற்குப் பிறகு சூர்யா ஒப்பந்தமான திரைப்படம் தான் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருக்கின்றார். இப்படத்தில் நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

அக்டோபர் 10ஆம் தேதி இந்த திரைப்படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் நடிகர் சூர்யா இப்படத்தில் 10-க்கும் மேற்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் இப்படத்தில் சூர்யா நடித்து வருவதால் படம்  மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கின்றது. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானலில் அடர்ந்த காட்டுப்பகுதி, பாங்காங் உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பேசியிருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது கங்குவா திரைப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி இருக்கின்றது.

இப்படத்தின் காட்சிகள் அனைத்தும் மிக சிறப்பாக வந்து உள்ளதாக பலரும் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இப்படத்தின் சண்டை இயக்குனர் தெரிவித்த போது இப்படத்தில் நான்கு விதமான சண்டைக் காட்சிகள் இருக்கின்றது. அனைத்து காட்சிகளும் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றது. அதிலும் அண்டர் வாட்டரில் நடக்கும் ஒரு சண்டைக்காட்சி தமிழ் சினிமாவில் அல்ல இந்திய சினிமாவிலேயே இதுவரை கண்டிராத ஒரு சண்டைக் காட்சியாக இருக்கும் என்று கூறியதாக அவர் தெரிவித்திருந்தார்.

ramya suresh

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago