Connect with us

Cinema News

ராதா ரவி ஒரு அப்யூசிவ் ஆளு!.. அந்த காம்பவுண்டுக்கு நான் போகவே மாட்டேன்.. சின்மயி பதிலடி!..

டப்பிங் யூனியன் காம்பவுண்டுக்குள் பாடகி சின்மயியை உள்ளே அனுமதிக்கவே முடியாது என நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராதா ரவி பேசியது பலரையும் ஷாக் ஆக்கியது. இந்நிலையில், ராதா ரவியின் பேச்சுக்கு பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் திரிஷாவுக்கு சின்மயி குரல் கொடுத்திருந்தார். டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி நீக்கப்பட்டுள்ள நிலையில், திருட்டுத்தனமாக நைட்டோட நைட்டாக வந்து டப்பிங் பேசி சென்றிருக்கிறார் சின்மயி என்றும் அவரை வைத்து எதுவும் தெரியாமல் லோகேஷ் கனகராஜ் பண்ண வேலைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டியுள்ளார் என்றும் பேசினர்.

இதையும் படிங்க: எஸ்.பி.பி. எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் முதல் படத்திலேயே இயக்குனர் எடுத்த ரிஸ்க்.!..

இந்நிலையில், ”மலேஷிய நாடு வழங்காத டூப்ளிகேட் டத்தோ பட்டத்தை தானே சூட்டிகிட்டு, டத்தோ வளாகம்னு பேரு வெச்ச அந்த டப்பிங் யூனியன் காம்பவுடு, பில்டிங் எல்லாமே இல்லீகல்னு சென்னை கார்ப்பரேஷன் சீல் வெச்சு தரமட்டம் ஆக்கிடுச்சே என சின்மயி விளாசி உள்ளார்.

மேலும், டப்பிங் யூனியன் மெம்பர்ஸோட உழைப்புலருந்து இவங்க எடுத்த காசு மண்ணோட போச்சு. இவரைபோல ஒரு அப்யூசிவ் ஆளு இருக்கும் எந்த காம்பவுண்ட்லயும் எனக்கு போகணும்ன்ற அவசியமில்ல.” என சின்மயி ட்வீட் போட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: நான் பிளேபேக் சிங்கர் தெரியுமா?.. ஃபுல் போதை.. பிரபல பாடகர் விமான நிலையத்தில் பண்ண அலப்பறை!..

இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ராதா ரவி மற்றும் சின்மயி இடையே என்ன தான் பிரச்சனை மற்ற பிரபலங்கள் இதில் தலையிட்டு ஒரு சரியான முடிவை எடுக்க ஏன் முன் வரவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top