latest news
பண மோசடி வழக்கில் முதல்முறையாக வாய் திறந்த சின்ன மருமகள் நடிகை ஸ்வேதா!! தாமரைக்கு பதிலடியோ?
Chinna Marumagal: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா தன் பற்றி பரவி வரும் வதந்திக்கு முதல்முறையாக வாய் திறந்து விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
நடிகை ஸ்வேதா கணவர் தன்னுடைய 3 பவுன் நகையை வாங்கி ஏமாற்றியதாக ஓபனாக பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். இது தொடர்ந்து ஸ்வேதா விவாகரத்து வழக்கு தன் மீது போட்டு இருப்பதாக ஆதி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் ஸ்வேதா இந்த விஷயம் குறித்து வாய் திறந்து முதல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில், நான் முன்னாடியே சொன்னபடி நாங்கள் காதலித்து ரிஜிஸ்ட்டர் மேரேஜ் செய்து கொண்டோம். அப்போது எனக்கு 20 வயது தான். அதனால் எனக்கு எதுவும் தெரியாமல் இருந்தேன்.
அவர் தன் மீது ஒரு வழக்கு இருப்பதாக சொன்னார். சரி செய்து விடலாம் எனக் கூறி நிறைய செலவை செய்தேன். பின்னர் தான் தெரிந்தது அவர் மீது நிறைய வழக்கு இருக்கிறது. அதனால் அந்த உறவை தொடராமல் விலகி என் குடும்பத்துடன் வந்து சேர்ந்துவிட்டேன்.
அவர் என்னுடைய பணம், நகை என பலவற்றையும் ஏமாற்றிவிட்டார். நானும் காதலித்ததால் ஏமாந்தேன். அவர் மீது விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருக்கேன். அது நீதிமன்றத்தில் நடந்து வருவதால் அமைதியாக இருக்கேன். ஆனால் இப்போ தான் அவர் எவ்வளவு மோசமான ஆள் என்பதை தெரிந்து கொண்டேன்.
அவரை நான் ரொம்ப காதலித்ததால் மேடைகளில் அவர் பெயரை சொல்லி வந்தேன். அவர் என் காதலுக்கு தகுதியற்றவர். அவரை நம்பி யாரும் மோசம் போக கூடாது. ஏற்கனவே பல முறை நான் அவரை நம்ப வேண்டாம் எனக் கூறியும் இன்னும் பலர் அவரை நம்பி கொண்டு பணம், நகையை ஏமாறுகின்றனர்.
நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது வேலைகளை கூட நிம்மதியாக செய்ய முடியவில்லை. சமூக ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்படைந்து இருக்கிறேன். வழக்கு தொடர்ந்தும் அவர் என்னை தொந்தரவு செய்கிறார்.
அவரை நம்பி போட்டோஷூட், ப்ரோமோஷன் பணிகளுக்கு அழைக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்கிறேன். நம்மால் முடிந்ததை செய்வோம். இனிமேல் கடவுள் பார்த்து கொள்வார். காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுத்தால் ரொம்ப நல்லது எனவும் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
ஸ்வேதா இன்ஸ்டா பதிவு: https://www.instagram.com/p/DWivO1UgXpx/?utm_source=ig_embed&ig_rid=10421434-04c5-4936-9efb-a57c071d4da6&img_index=1
