வீர தீர சூரன் வொர்த் வர்மா!.. சீயான் விக்ரமுக்கு 59 வயசா?.. கோடிக்கணக்கில் பேங்க் பேலன்ஸ் இருக்காம்!

சீயான் விக்ரம் தனது 59வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விக்ரம் ’என் காதல் கண்மணி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து தந்துவிட்டேன் என்னை, காவல் கீதம், மீரா போன்ற பல படங்களை நடித்துதிருந்தார். சேது படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் தன் வசப்படுத்தினார். அந்த படத்திலிருந்து அவர் சீயான் விக்ரம் எனவும் அழைக்கப்பட்டார். சேது படத்தின் வெற்றியைடுத்து தில், காசி, ஜெமினி, சாமுராய், கிங், தூள், சாமி, பிதாமகன், அருள் என தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு நடிப்பையும்,உடலை வருத்தியும் நடிப்பதில் கமல்ஹாசனிற்கு அடுத்து விக்ரம் அந்த நடிப்பை கையாண்டு வருகிறார். அவரது நடிப்பை அந்நியன் படத்தில் பார்ந்த பலரையும் ஆச்சர்யப்படுத்திவிட்டார். தெய்வத்திருமகள், கந்தசாமி, ஐ போன்ற பல படங்களுக்கு சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்று குவித்துள்ளார்.
நடிகர் விக்ரம் 1992ம் ஆண்டு ஷைலஜா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அக்ஷிதா என்ற மகளும் துருவ் என்ற மகனும் உள்ளனர். மகன் துருவும் ஆதித்ய வர்மா படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

1990 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய தனது பயணம் சினிமா துறையில் இதுவரை இவர் சம்பாதித்த சொத்து மதிப்பு ரூ250 கோடி வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விக்ரமின் தங்கலான் படத்தின் தோல்வியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான வீர தீர சூரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதையடுத்து இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார். அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் மட்டும் இவ்வளவு சீக்கிரமாக வராமல் இருந்திருந்தால் இந்நேரம் வீர தீர சூரன் 2ம் பாகம் 100 கோடி வசூலை தொட்டிருக்கும் என்கின்றனர்.