More
Categories: Cinema News latest news

சினிமாவை விட்டு ஒதுங்கிய சியான் விக்ரம்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது சியான் விக்ரமை வைத்து பெரிய பட்ஜெட்டில் 18ம் நூற்றாண்டின் கதைக்களத்தை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இந்த படம் 3 டி தொழில் நுட்பத்தில் உருவாகவுள்ளது. இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். அண்மையில் கூட இப்படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது.

Advertising
Advertising

மேலும் இவர், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டெம்பர் 30 அன்று வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் வெளியீட்டிற்கு முன்பு, நன்றாக இருந்த விக்ரம் திடீரென காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக விக்ரம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இவரது வெளிவர இருக்கும் அடுத்த  படமான கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது, வருகை தந்திருந்த விக்ரம் பழைய தெம்புடன் பேசினார். அப்போது, அவரது ரசிகர்களும் பெரும் உற்சாகத்துடன் விக்ரமை வரவேற்றனர்.

இதையும் படிங்களேன் – மறுபடியும் முதலில் இருந்தா.?! லெஜண்ட் அண்ணாச்சியின் பதிலால் ஆடிப்போன தமிழ் சினிமா…. 

தற்போது, இவரது உடல் நலம் குறைவு காரணமாக மருத்துவர்கள் தரப்பில் அடுத்த 6 மாதம் ஓய்வு எடுக்க விக்ரமிடம் அறிவுரை கூறியுள்ளார்களாம். இதனால், சியான் விக்ரம் அடுத்த 6 மாதம் எந்த படங்களிலும் நடிக்க வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த இவரது ரசிகர்கள் மிகவும் சோகத்துடன் இணையத்தில் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அதுபோல், பா.ரஞ்சித் இயக்கும் புது படமும் ஏற்கனவே கிடப்பில் போடப்பட்டிருந்த துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த 6 மாதம் கழித்து தான் தொடங்கும் எனவும் அப்போதான் அவரும் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Manikandan

Recent Posts