ஒரே ஒரு முறை ஆசைப்பட்டதை செய்த 5 சினிமா பிரபலங்கள்...அதுக்கு அப்புறம் ட்ரையே பண்ணலையாம்!...

மொத்த சினிமா வாழ்க்கையிலும் ஒரே ஒருமுறை டாப் 5 பிரபலங்கள் செய்த திடீர் முயற்சி... அதுக்கு அப்புறம் ட்ரையே பண்ணலையாம்...

திரை பிரபலங்கள் ஆசைக்காக சில முயற்சிகளை செய்வார்கள். ஆனால் அது அவர்களுக்கு பெரிதாக கை கொடுக்காமல் போய் விடும். இனிமே இதை செய்யவே கூடாது என முடிவெடுத்து விடுவார்கள். இல்லை அந்த முயற்சியை திரும்பி செய்ய வாய்ப்பும் கிடைத்து இருக்காது. அப்படி டாப் 5 திரை பிரபலங்கள் செய்த முதலும் கடைசியுமான சில முயற்சிகள்.

Shalini Ajithkumar

ஷாலினி அஜித்குமார்:

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு வந்த ஷாலினி பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் நாயகியாக நடித்த காதலுக்கு மரியாதை அவருக்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. தொடர்ச்சியாக பல வாய்ப்புகளும் வந்தது. ஷாலினிக்கு தன் சொந்த குரலில் பாட ஆசை வந்ததால் அமர்க்களம் படத்தில் ஒரு பாடலை பாடினார். இது தான் தமிழ் சினிமாவிலேயே அவர் முதலும், கடைசியுமாக பாடிய பாடல்.

இதையும் படிங்க: ஒரு பெண்ணுக்காக படப்பிடிப்பையே ரத்து செய்த ஜெய்சங்கர்!.. யார் அந்த பெண் எதுக்காக தெரியுமா?..

முரளி:

தமிழ் சினிமாவின் நடிகர்களில் முக்கியமானவர் முரளி. இவருக்கு ரசிகைகள் ஏராளமாக இருந்தனர். தொண்டன் படத்தில் ஆட்டோ ஓட்டினராக முரளி நடித்திருப்பார். இந்த படத்தில் முதல் பாடலை பாடியவர் முரளி தான். ஆனால் பாட்டுக்கு பெரிய ரீச் கிடைக்காததால் அதன்பின் அவர் அந்த முயற்சியை எடுக்கவே இல்லையாம்.

pandiyarajan

பாண்டியராஜன்:

திருதிரு முழி என்றாலே முதல் பலருக்கு நினைவுக்கு வருபவர் இயக்குனர் பாண்டியராஜன் தான். நடிப்பிலும் சரி இயக்கத்திலும் சரி நல்ல இடத்தினை பிடித்தவர். ஒரே ஒருமுறை மட்டும் ஒரு படத்துக்கு இசையமைத்து இருந்தார். அவரோட மாமனாரின் தயாரிப்பில் வெளிவந்த நெத்தியடி தான் அது. பல நாள் ஆசையை அந்த படத்தில் தீர்த்து கொண்டாராம். பெரிய வரவேற்பு கிடைக்காததால் அதன்பின்னர் அந்த முயற்சியை செய்யவே இல்லையாம்.

திருநாவுக்கரசு:

காங்கிரஸில் முக்கிய இடத்தில் இருந்தவர் திருநாவுக்கரசு. இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சினிமாவில் இருந்தாராம். திரைப்பட விநியோகிஸ்தராக இருந்தவர் மருதுபாண்டி படத்தின் தயாரிப்பாளராகவும், கதையாசிரியராகவும் இருந்து இருக்கிறார். ஆனால் ஒரு படத்தில் இவர் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அப்படம் தான் அக்னிப் பார்வை. இது அவர் ஹீரோவாக நடித்த ஒரே திரைப்படம்.

bharathiraja

பாரதிராஜா:

தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர். இயக்குனர் இமயம் எனப் புகழப்படும் பாரதிராஜா ஒரு படத்தில் மட்டும் பாடி இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த கருத்தம்மா படத்தில் காடு பொட்ட காடு பாடல் தான் அது. மலேசியா வாசுதேவனோடு இணைந்து அந்த பாடலை பாடினாராம். இது தான் அவர் சினிமாதுறையில் பாடிய ஒரே பாடல்.

Related Articles
Next Story
Share it