Categories: latest news

தமிழ் சினிமாவில் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற முதல் திரைப்படம் எது தெரியுமா?.. நம்ம எம்ஜிஆர் நடிச்சதா?..

Marmayogi : சினிமாவைப் பொறுத்தவரை ஒரு திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்படுகின்றது என்றால் அந்த திரைப்படத்தில் அதிக வன்முறை காட்சிகள், ஆபாச காட்சிகள் இருக்கின்றது என்பது அர்த்தமாகும். தமிழ் சினிமாவில் தற்போது பல திரைப்படங்களில் இது போன்ற காட்சிகள் இருக்கின்றன. இது போன்ற திரைப்படங்களை குடும்பத்துடன் சென்று பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.

ஆனால் 20 வருடத்திற்கு முன்பு திரைப்படங்களில் இது போன்ற வன்முறை காட்சிகள், ஆபாச காட்சிகள் அதிகம் இல்லை. ஏ சான்றிதழ் வழங்கப்படும் திரைப்படங்களை பார்ப்பதற்கு பெருமளவு மக்கள் அப்போதெல்லாம் யோசித்து வந்தார்கள். இப்போது அது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் 1951இல் ஒரு திரைப்படம் ஏ சான்றிதழ் வாங்கி இருக்கின்றது.

அப்படி அந்த திரைப்படத்திற்கு எதற்காக ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. அதற்கான காரணம் என்ன என்பதை இதில் நாம் தெரிந்து கொள்வோம். தமிழில் முதன்முதலாக ஏ சான்றிதழ் வாங்கிய திரைப்படம் என்றால் அது எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த மர்மயோகி திரைப்படம் தான். 1947 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜகுமாரி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் எம்ஜிஆர்.

அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த அசத்தி வந்த இவர் மர்மயோகி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்படத்தில் எம்ஜிஆர், அஞ்சலிதேவி, பண்டரிபாய், எம் என் நம்பியார், ஜாபர், சீதாராமன், எஸ் வி சகஸ்ரநாமம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். கே.ராம்நாத் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

படத்தின் கதை: ஒரு நாட்டின் மன்னனை தன் கை பாவையாக வைத்துக் கொண்டு கொடுங்கோல் ஆட்சி நடத்தி வருகிறாள் மன்னனின் ஆசை நாயகி. இளவரசன் கரிகாலன் நாடு கடத்தப்படுகிறான். கரிகாலன் மக்களை திரட்டி நாட்டை மீட்பதற்கு போராடுகின்றான். இதற்கு இடையில் மர்மயோகி என்ற ஒரு உருவம் ஆட்சியை எதிர்த்து போராடுகின்றது. இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.

ஏ சான்றிதழ்: ஆங்கிலேயர் நாட்டை விட்டு சென்றதற்கு பிறகு திருத்தி அமைக்கப்பட்ட தணிக்கை குழு இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது. மர்மயோகியாக நடித்திருப்பவர் பல காட்சிகளில் ஆவியாக வந்து எல்லோரையும் மிரட்டுவார். இந்த காட்சியை சிறுவர்கள் பார்த்தால் அவர்கள் பயந்து விடுவார்கள் .

மேலும் அவர்களுக்கு மனரீதியான பிரச்சினை ஏற்படும் என்று கூறி இந்த திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கினார்களாம். அதேபோல இந்த திரைப்படம் தான் அடல்ஸ் ஒன்லி என விளம்பரம் செய்யப்பட்ட முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ramya suresh

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

7 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

9 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

9 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

10 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

11 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

17 hours ago