Categories: latest news

கண்ணதாசனை ஏமாற்றிய பிரபல நடிகை… பதிலுக்கு கவிஞர் என்ன செய்தாருன்னு தெரியுமா?

கவியரசர் கண்ணதாசன் ஒரு படம் தயாரிக்க விரும்பினார். அதற்காக சாவித்திரியிடம் பேசி இருந்தார். அந்த நேரம் பார்த்து சாவித்திரிக்கு எம்ஜிஆர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அதனால் தனது மொத்த கால்ஷீட்டையும் அந்தப் படத்துக்கேக் கொடுத்து விட்டாராம். ஆனால் கவியரசர் சும்மா விடுவாரா? அவர் என்னதான் செய்தாருன்னு பாருங்க.

1962ல் இந்தியா, சீனா போர் நடந்தது. இந்தியாவுக்கு சற்றே பின்னடைவு. தொடர்ந்து இந்திய அரசு மீதும், ராணுவம் மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். அந்த நேரம் மக்களுக்கு தேசப்பற்றை ஊட்ட நினைத்தார் கண்ணதாசன். அதனால் ‘ரத்த திலகம்’ என்ற படத்திற்கு கதை, திரைக்கதை எழுதினார். பஞ்சு அருணாச்சலம் தயாரிக்க சிவாஜி, சாவித்திரி நடித்தனர்.

இந்தப் படம் நடிக்கும்போதே சாவித்திரிக்கு எம்ஜிஆர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். அதனால் வந்த வாய்ப்பை விடக்கூடாதுன்னு நினைத்த சாவித்திரி மொத்த கால்ஷீட்டையும் அவரது படத்திற்குக் கொடுத்துவிட்டார். இதுகுறித்து கண்ணதாசனின் உதவியாளர் வீரய்யா சாவித்திரியிடம் பேசியுள்ளார்.

‘மொத்த கால்ஷீட்டையும் எம்ஜிஆர் படத்திற்குக் கொடுத்தாச்சு. அதனால அது முடிஞ்சா தான் உங்க படத்தைப் பண்ண முடியும்’னு சொல்லிடுறாங்க. அப்புறம் கண்ணதாசன் இதைக் கேட்டதும் உடனடியாக சாவித்திரிக்குப் போன் போட்டு கண்டபடி திட்டியுள்ளார். ‘டேட் கொடுக்கலைன்னா பிலிமைக் கொளுத்திடுவேன்’னு சொல்லிட்டாராம்.

சாவித்திரி ஒண்ணுமே பேசாம போனை வைத்துவிட்டாராம். அப்போது வீரய்யா போன் போட்டு சாவித்திரியிடம் பேசினார். ;கவிஞர் பேசியது சரியல்ல. என்கிட்ட மன்னிப்பு கேட்டா தான் டேட் தருவேன்;னுட்டாரு சாவித்திரி. இந்தப் பிரச்சனை பெரிதாக, அது சிவாஜி தம்பி சண்முகத்திற்குச் செல்கிறது.

‘கவிஞரே, நீங்க கவலைப்படாதீங்க. நான் முடிச்சி விடுறேன்’னு சொல்றார் அவர். சாவித்திரி நடிக்கச் செல்லும் ஸ்டூடியோக்களுக்கு எல்லாம் அவர் செல்கிறார். ‘ஏன் இப்படி அலையறீங்க? நான் தான் முடியாதுன்னு சொல்லிட்டேனே’ என்கிறார் சாவித்திரி. அப்புறமும் விடாமல் அவர் அலைவதைப் பார்த்து மனம் இறங்குகிறார்.

படம் போர் முடிவதற்குள் வரணும். படத்தை முடக்கினால் கவிஞர் கடனானியாவார்னு சொல்ல, சாவித்திரி டேட் கொடுக்கிறார். 2 கண்டிஷன் போடுகிறார். முழு சம்பளமும் ஒரே பேமெண்ட்ல வேணும். படம் முடியற வரை நீங்க மட்டும் தான் காண்டக்ட் பண்ணனும்னு சொல்றாரு. அதைக் கண்ணதாசனிடம் சொல்ல அவரும் செக் கொடுக்கிறார்.

10 நாளில் சாவித்திரி மேனேஜர் வீரய்யாவுக்கு போன் செய்கிறார். ‘கவிஞர் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகிவிட்டது’ என்று. உடனே ‘இதை சாவித்திரியிடம் சொல்லிடாதீங்க. ரெண்டே நாளில் பணத்துக்கு ஏற்பாடு பண்றேன்’னு வீரய்யா சொல்கிறார். அதன்பிறகு பணத்தை ரெடி பண்ணிக் கொடுத்து பவுன்ஸ் ஆன செக்கை திருப்பியுள்ளார் வீரய்யா. இப்படி பல சிக்கல்களைக் கடந்து ரிலீஸ் ஆனது ரத்தத்திலகம். படம் உண்மையிலேயே சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

ராம் சுதன்

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

51 minutes ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

2 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

11 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

13 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

13 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

14 hours ago