Categories: latest news

தயாரிப்பாளர் கேட்ட கேள்வி… தெனாவெட்டா பதில் சொன்ன இயக்குனர் பாலா… அப்பவே இப்படியா..?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பைரவி படத்தின் இயக்குனர் எம்.பாஸ்கர். இவரது மகனும் தயாரிப்பாளருமான பாலாஜி பிரபு, இயக்குனர் பாலாவின் திமிரான பேச்சு குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தீர்ப்புகள் திருத்தப்படலாம், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், பௌர்ணமி அலைகள், பன்னீர் நதிகள் என நாலு படங்கள் சிவகுமார் நடித்து இருந்தார். எல்லாமே சூப்பர்ஹிட். அப்பாவுக்கும், சிவகுமார் சாருக்கும் அண்ணன், தம்பி மாதிரி நல்ல நட்பு.

அப்போ சிவகுமார் சார் அப்பாக்கிட்ட வந்து சொன்னாரு. ‘ஆஸ்கர் பிலிம்ஸ் எனக்கு தாய்வீடு மாதிரி. என் பையனை வச்சிப் படம் பண்ணலாம்னு நினைக்கிறேன். அவனுக்கு ஒரு பெரிய ஹிட் கொடுக்கணும். பாலா சார் ஒத்துக்கிட்டாரு.

நீங்க பிளான் பண்ணுங்க’ன்னு சொன்னாரு. அப்பாவும் ஒத்துக்கிட்டாரு. பாலா சார் மட்டும் தனியா அப்பாக்கிட்ட வந்தாரு. ‘என்ன பட்ஜெட்ல எடுப்பீங்க? எத்தனை நாள்ல எடுப்பீங்க? எத்தனை அடி பிலிம் ஆகும்?’னு கேட்டாரு. எல்லாத்துக்கும் ‘தெரியாது’ன்னு பதில் சொன்னார் பாலா.

அது அப்பாவுக்கு ஷாக்கா இருந்துச்சு. அப்பா எல்லாம் ஸ்ரீதர் சார்கிட்ட இருந்தவரு. அந்தக்காலத்துல 45 நாள் கால்ஷீட். 45 ஆயிரம் அடி பிலிம். இதுதான் பார்மட். 45 ஆயிரம் அடியை யூஸ் பண்ணினா அதுல ௧/3 பங்கு தான் அதாவது 13ஆயிரத்து 500 அடி தான் யூஸ் பண்ணப் போறீங்க.

அப்புறம் பாலா சார் அப்படிப் பேசுனதுக்கு அப்புறம் சரி. போயிட்டு வாங்கன்னு சொல்லி விடுறேன்னாரு. அப்புறம் சிவகுமார் சாருக்கு போன் பண்ணிக் கூப்பிட்டு ‘வாத்தியாரே, இது சரி வராது. நான் எப்படி படம் எடுப்பேன்னு உங்களுக்குத் தெரியும்.

ஒரு மணி நேரம் கூட வேஸ்ட் பண்ண மாட்டேன். கால்ஷீட் படி பக்காவா பிளான் பண்ணி எடுக்குறவன். எனக்கு இந்த டைரக்டர் கூட செட்டாகாத மாதிரி தோணுது. அதனால நமக்குள்ள உறவு கெட்டுப் போயிடக்கூடாது.

இந்த புராஜெக்ட் வேண்டாம்’னு சொல்லி நாசூக்கா அப்பா மறுத்துட்டாரு. அப்பவே பாலா சார் அப்படித் தான் பேசிருக்காரு. புதுசா வந்துருக்கோமே. இது நமக்கு 2வது படம். எப்படியாவது தயாரிப்பாளரை ஒத்துக்க வைக்கணுமே அப்படிங்கற மைன்ட் செட்லாம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பாலா, நந்தா படத்தை இயக்கினார். இது தான் அவரது 2வது படம். சூர்யா, லைலா, ராஜ்கிரண், சரவணன், கருணாஸ் உள்பட பலர் நடித்து இருந்தனர். இந்தப் படத்தில் இருந்து தான் சூர்யாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் தயாரிப்பாளராக கணேஷ் ரகு, கார்த்திக் ராதாகிருஷ்ணன், வெங்கி நாராயணன், ராஜன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர். அபராஜித் பிலிம்ஸ் என்ற பேனரில் படம் வெளியானது.

ராம் சுதன்

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

7 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

7 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

14 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

15 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

16 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago