Categories: latest news

விஜயகாந்த் அப்பாவுடன் செய்த வாக்குவாதம்… கடைசில அவரு சொன்னதுதான் நடந்துருக்கு..!

விஜயகாந்தை தமிழ்சினிமா உலகில் கருப்பு எம்ஜிஆர், புரட்சிக்கலைஞர்னு சொல்வாங்க. அவரை யார் பார்க்க வந்தாலும் முதலில் ‘சாப்பிட்டீங்களா…’ன்னு தான் கேட்பாராம். அப்புறம் சாப்பாடு கொடுத்ததும் தான் பார்த்துப் பேசுவாராம். அவரிடம் யாராவது உதவின்னு வந்தா மறுக்காம செய்துவிடுவாராம். அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் தங்கராஜ் பிரபல தயாரிப்பாளரும், சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணனிடம் விஜயகாந்த் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

விஜயகாந்தை நான் அன்னைக்குக் கூப்பிட்ட மாதிரி தான் ‘நீ, வா, போ’ன்னு கூப்பிடுவேன். அவர் வளர்ந்த காலகட்டத்துல நான் கொஞ்சம் மாற்றணும்னு முயற்சித்த போது ‘வேணாம். நீ மாறாத. அப்படியே பேசு’ன்னு சொன்னாராம் விஜயகாந்த்.

விஜயகாந்த் ஒருமுறை மதுரைக்கு வரும்போது தனது அம்மாவை அழைத்து வந்து விஜயகாந்தைப் பார்க்கச் செய்தாராம் தயாரிப்பாளர் தங்கராஜ். அவரது அம்மாவும் விஜயகாந்துக்காக நாட்டுக்கோழி அடித்து குழம்பு செய்யப் போனார்களாம். ‘அவருலாம் சாப்பிடமாட்டார். சும்மா வா’ன்னு அழைத்துச் சென்றாராம்.

விஜயகாந்தைப் பார்த்ததும் ‘ஆமாய்யா ஆமாய்யான்னு அவரு கன்னத்தைத் தடவி நீ நல்லா வருவேயா’ன்னு சொன்னாங்களாம். அப்புறம் ‘இவன் எங்கேயாவது காணாமப் போயிடுவான்னு சொல்றாங்க. இவனைக் கொஞ்சம் பார்த்துக்கய்யா’ன்னு சொன்னாங்களாம். கடைசி வரை விஜயகாந்த் அவரை விடவே இல்லையாம். கையில புடிச்சிக்கிட்டாராம். அப்படிப் பேசும்போதே தங்கராஜ் இன்னொரு சுவாரசியமான விஷயத்தையும் பகிர்ந்து கொண்டார். அது இதுதான்.

விஜயகாந்துக்கும், அவரது அப்பாவுக்கும் ஏதோ விவாதம் நடக்குது. நைனா நைனான்னு ஏதோ சொல்றாரு. அப்போ தான் விஜயகாந்த் சொல்றாரு. ‘கதாநாயகனா நடிக்காம நான் வரமாட்டேன்’னு. எனக்குக் கொஞ்சம் தெலுங்கு தெரியும். விஜயகாந்தும் கடைசி வரைக்கும் பிடிகொடுக்காமப் பேசுறாரு. கடைசில அவங்க அப்பா ‘உன் கொடியும் ஒருநாள் தமிழ்நாட்டுல பறக்கும்’னு சொல்றாரு.

சொல்லிட்டு 1000 ரூபாயைக் கையில கொடுக்காரு. அவரு வாங்கலன்னதும் பக்கத்துல இருக்குற யாரு கையிலயோ கொடுக்காரு. அப்புறம் ஆட்டோல ஏறிக் கிளம்பிட்டாரு. அவரு சொன்ன வார்த்தையை நான் டைரில நோட் பண்ணிருக்கேன். ‘உன் கொடியும் ஒரு நாள் தமிழ்நாட்டுல பறக்கும்’னு. அவரு ‘நீயும் ஒருநாள் சிஎம் ஆவே’ன்னு சொல்லியிருக்கக்கூடாதா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ராம் சுதன்

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

6 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

7 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

14 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

15 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

16 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago