சில்க் ஸ்மிதா வாழ்க்கை கொடுத்தது நான்தான்.. எனக்கும் ’அந்த‘ வாய்ப்பு கிடைத்தது..

Silk smitha: சில்க் ஸ்மிதா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் கொடி கட்டி பறந்தாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தது. தொடர்ந்து அவருடைய இறப்பு இன்னமும் மர்மமாகவே இருப்பதாக பிரபல திரை விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.

இது குறித்த அவர் கூறும் போது, சில்க் ஸ்மிதா என் மூலமாக தான் சினிமாவுக்குள் வந்தார். அப்போது நான் மாயா என்ற கிளாமர் பத்திரிக்கையில் புகைப்பட கலைஞராக பணிபுரிந்து வந்தேன். அந்த சமயத்தில் நடுப்பக்கத்தில் சுஷ்மிதா என்ற நடிகையின் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தேன்.

அப்பொழுது வண்டி சக்கரம் படத்தை இயக்கிக் கொண்டிருந்த வினு சக்கரவர்த்தி அந்த சுஷ்மிதா நடிகை தன் படத்தில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்காக எனக்கு தடபுடல் விருந்து எல்லாம் வைத்திருந்தார். தொடர்ந்து நான் அடுத்த நாள் அவரை அந்த நடிகையிடம் அறிமுகப்படுத்தினேன். அதைத்தொடர்ந்து சுஷ்மிதா என்ற பெயரை ஸ்மிதா என மாற்றினார்.

அவருக்கு சினிமா வாழ்க்கையில் உதவியதற்காக நிறைய படங்களில் கணவராக நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. சில்க் ஸ்மிதா எதுவும் சாப்பிட மாட்டார்கள். நட்ஸ் மற்றும் உலர் பழங்களை மட்டுமே சாப்பிடுவார்கள்.

சில்க் ஸ்மிதாவின் பரம ரசிகர் பாலுமகேந்திரா. அதனால்தான் அவருடைய நிறைய படங்களில் ஸ்மிதாவிற்கு வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. நன்றாக சென்று கொண்டிருந்தால் சினிமா வாழ்க்கையில் தயாரிப்பில் இறங்கி தான் தன்னுடைய கேரியரை மொத்தமாக தொலைத்தார் ஸ்மிதா.

ஸ்மிதா ஒரு டாக்டரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவருடைய மகனுக்கு நடிக்க ஆசை இருந்தது. அவரை சூட்டிங் இருக்கு சில்க் ஸ்மிதா அழைத்து சென்றதே அவர்களுடைய வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து அவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி மர்மமான முறையில் இறந்தார். அவருடைய இறப்பிற்கு கூட விடை கிடைக்கவில்லை. மார்ச்சுவரியில் இருக்கும்போது கூட அவரிடம் பலர் தவறாக நடந்துள்ளனர் என குறிப்பிட்டு இருக்கிறார்.

Related Articles
Next Story
Share it