Mookuthi Amman 2: தமிழ் சினிமாவில் 25 வருடங்களுக்கும் மேல் திரைப்படங்களை இயக்கி வருபவர் சுந்தர்.சி. மினிமம் பட்ஜெட்டில், மிகவும் குறைவான நாட்களில் படத்தை எடுத்து ஹிட் கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை பெற்றுத்தரும் வெகு சில இயக்குனர்களில் சுந்தர் சி முக்கியமானவர். இவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா படம் 80 கிட்ஸ்களின் ஃபேவரைட்டாக இப்போதும் இருக்கிறது.
கார்த்திக், கவுண்டமணி, சரத்குமார், ரஜினி, கமல், அஜித், விஷால் என பலரையும் வைத்து படங்களை இயக்கியுள்ளார். ஆனால், விஜயை மட்டும் வைத்து இவர் படம் இயக்கவில்லை. சுந்தர் சி பலமுறை முயன்றும் விஜய்க்கும், அவருக்கும் செட் ஆகவில்லை. ஆக்சன் பட கதையே விஜய் நடிக்க வேண்டிய படம்தான். அவர் நடிக்காததால் விஷால் நடித்தார்.
காமெடி கலந்த காதல் படங்களை இயக்கிவந்த சுந்தர் சி. ராகவா லாரன்ஸை போல ஹாரர் காமெடி ரூட்டுக்கு மாறி அரண்மனை படத்தை எடுத்தர். இந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து அரண்மனை 2, அரண்மனை 3, அரண்மனை 4 என எடுத்து ஹிட் கொடுத்தார். அடுத்து அரண்மனை 5 எடுக்கவும் அவர் திட்டமிட்டிருக்கிறார்.
இதற்கிடையில் 12 வருடங்களுக்கு முன்பு விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி உள்ளிட்ட பலரையும் வைத்து அவர் இயக்கிய மதகஜராஜா திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. ஒருபக்கம், கேங்கர்ஸ் படத்தில் வடிவேலுவுடன் நடித்து வருகிறார்.
ஒருபக்கம் மூக்குத்தி அம்மன் 2 படத்தையும் அடுத்து எடுக்கவுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா அம்மனாக நடிக்கவுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் படத்திலும் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். இந்நிலையில், மூக்குத்தி அம்மன் 2-வில் அருண் விஜயை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஆனால், அவர் அதிக சம்பளம் கேட்பதால் இன்னும் முடிவாகவில்லை என்கிறார்கள். ஹீரோவாக நடித்து வரும் அருண் விஜய் நயன்தாராவிடம் தோற்றுப்போகும் வில்லனாக நடிக்க வேண்டும் என்றால் சம்பளத்தை சேர்த்து கேட்கத்தான் செய்வார். விரைவில் பேச்சுவார்த்தை முடிந்து இதில் அருண்விஜய் நடிக்கிறாரா என்பது தெரிந்துவிடும். மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…