துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக நுழைந்தவர் தனுஷ். அண்ணன் செல்வராகவனிடம் நடிப்பு கலையை பயின்றவர். அப்படம் ஹிட் அடிக்கவே அடுத்து காதல் கொண்டேன் படம் உருவானது. அந்த படமும் சூப்பர் ஹிட் அடிக்க மற்ற தயாரிப்பாளர்களும் தனுஷை தேடி வந்தனர்.
அப்படி தனுஷ் நடித்து வெளியான திருடா திருடி படமும் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றது. தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்ததால் எல்லோராலும் கவனிக்கப்பட்டார் தனுஷ். தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கினார். மசாலா படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடித்தார்.
இதனால் தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்கிற இமேஜ் உருவானது. குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய படங்கள் தனுஷ் என்ன மாதிரியான நடிகர் என்பதை எல்லோருக்கும் காட்டியது. இதுவரை 2 தேசிய விருதுகளையும் தனுஷ் வாங்கி இருக்கிறார்.
இந்நிலையில்தான் தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்திருக்கிறார். அப்படி உருவான ராயன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
படத்தில் கதை இல்லை, இரண்டாம் பாதி சரியில்லை, லாஜிக் இல்லை என பலரும் சொன்னார்கள். ஆனால், வசூல்ரீதியாக இப்படம் வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் மாறன் திரைபப்டம் இந்திய அளவில் 40 கோடிக்கும் மேலும், உலக அளவில் 50 கோடிக்கு மேலும் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘மாறன் படத்தை சிறந்த பிளாக்பஸ்டர் பிறந்தநாள் பரிசாக கொடுத்திருக்கிறீர்கள். எனது ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், ஊடக மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது ரசிகர்கள் ஆகியோரின் ஆசிர்வாதம் இது’ என பதிவிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…