தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார் நடிகர் தனுஷ். அதிலும் ராயன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷுக்கு நிற்க கூட நேரமில்லை என்று தான் கூற வேண்டும். தொடர்ந்து தன்னுடைய இயக்கத்தில் படங்களை இயக்கி வந்தாலும் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
ராயன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் இளம் நடிகர்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற ஒரு காதல் திரைப்படத்தை இயக்கி தயாரித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. அதனை தொடர்ந்து இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை இயக்கி நடித்து இருக்கின்றார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 20 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருப்பதாக கூறப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து படம் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். ஆனால் ஏப்ரல் 10ம் தேதி இந்த திரைப்படம் வெளியாவதில் சில சிக்கல்கள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையில் நடிகர் தனுஷ் மற்ற இயக்குனர் படங்களிலும் கமிட்டாகி இருக்கின்றார். அதிலும் பல இயக்குனர்களின் படங்களில் கமிட்டாகி இருப்பதால் எந்த திரைப்படத்தில் நடிப்பார் என்கின்ற சந்தேகம் ரசிகர்களிடையே அதிகரித்திருக்கின்றது. காரணம் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துள்ள நிலையில் ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாகும் என்று கூறி வருகிறார்கள்.
அதனை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். இப்படத்தின் பூஜையும் சமீபத்தில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் கூறி வருகிறார்கள். இதனை தொடர்ந்து தற்போது புதிய ஒரு தகவலும் வெளியாகி இருக்கின்றது.
அதாவது கடந்த ஆண்டு லப்பர் பந்து என்கின்ற திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறி வந்தார்கள். அதன் பிறகு படம் தொடர்பான எந்த அப்டேட் வெளியாகாததால் ஏற்படும் டிராப் ஆகிவிட்டது என்று கூறிவந்த நிலையில் நடிகர் தனுஷ் அடுத்ததாக தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
சமீபத்தில் தான் இயக்குனர் தமிழரசன் நடிகர் தனுஷை சந்தித்து கதை கூறியிருப்பதாகவும், அந்த கதையை கேட்டு நடிகர் தனுஷ் மிகவும் ஆச்சரியப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும் தமிழரசனிடம் கதை மிகப்பிரமாதமாக இருக்கின்றது நிச்சியம் இந்த திரைப்படத்தை நாம் இணைந்து செய்வோம் படத்தின் கதையை தயார் செய்யுங்கள் என்று கூறினாராம்.
அதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரிடம் போன் செய்து இந்த இயக்குனர் மிகச் சிறப்பாக வருவார். படத்தின் கதை அவ்வளவு பிரமாதமாக இருக்கின்றது என்று பாராட்டி தள்ளி இருக்கின்றார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…