ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு நடுவே ஜெயம் ரவி நடிப்பில் வெளியானது பிரதர் திரைப்படம். ராஜேஷ் இயக்கத்தில் வெளியான இந்த பிரதர் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். ஒரு ஃபுல் ஃபேமிலி எண்டெர்டெய்னராக இந்தப் படம் வெளியாகியிருக்கிறது.
மனைவியுடனான பிரச்சினைக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் பிரதர் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. அதனால் ரசிகர்கள் மத்தியில் எப்படிப்பட்ட ஒரு வரவேற்பை பெற போகிறது என்ற ஆர்வம் படக்குழு உட்பட ஜெயம் ரவிக்கும் இருந்தது. ஆனால் இதுவரை ஒரு கலவையான விமர்சனத்தையே படம் பெற்று வருகிறது.
இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் வெற்றி வாகை சூடி வருகிறது. இந்த நிலையில் ஜெயம் ரவி தக் லைஃப் படத்தில் நடிக்க இருந்து அதன் பிறகு அந்த வாய்ப்பு ஏன் பறி போனது என்பதற்கான காரணத்தை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
ஆரம்பத்தில் தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவிதான் நடிப்பதாக இருந்தது. கூடவே துல்கர் சல்மானும் நடிப்பதாக இருந்தது. அதன் பின் துல்கர் சல்மான் படத்தில் இருந்து விலக ஜெயம் ரவியும் அடுத்து விலகினார். அவருக்கு பிறகுதான் சிம்பு இந்தப் படத்திற்குள் நுழைந்தார். ஆனால் அதற்குள் சிம்பு படத்தில் நுழைந்ததால்தான் ஜெயம் ரவி விலகினார் என்ற ஒரு செய்தி வெளியானது.
ஆனால் உண்மையிலேயே கால்ஷீட் பிரச்சினை காரணமாகத்தான் ஜெயம் ரவி படத்தில் நடிக்க முடியாமல் போனதாக அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த வாய்ப்பை தவறவிட்டோமே என்ற வருத்தத்தில் இப்போது வரை இருப்பதாகவும் கூடிய சீக்கிரம் மீண்டும் கமலுடன் நடிப்பேன் என்றும் ஜெயம் ரவி கூறியிருக்கிறார். நாம நினைச்சது நடக்காம இருந்திருக்கா? அதனால் மீண்டும் அந்த மாதிரி ஒரு வாய்ப்பு வரும். மீண்டும் கமலுடன் நடிப்பேன் என்று உறுதியாக ஜெயம் ரவி கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…