தக் லைஃப் படம் நாளை உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகிறது. இதையொட்டி இன்று நடந்த பிரஸ்மீட்டில் படத்தில் நடித்த நாசர் என்ன சொல்றாருன்னு பார்ப்போமா…
நாயகன் படத்துல தான் முதன் முதலாக கமல், மணிரத்னம் சாருடன் இணைகிறேன். அவங்க இரண்டு பேருமே 38 வருஷம் கழிச்சி மீண்டும் நான் இணைவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். அது இல்லாமலேயே இந்தப் படம் தமிழ்சினிமாவிலேயே முக்கியமான படமாக இருக்கப் போகுது. ஏன்னா மணிசார் அறியப்படுவது நாயகன் படத்தால. அது ஒரு வெற்றிகரமான படம் மட்டுமல்ல. கல்ட் பிலிமாக இருந்தது. அதே மாதிரி கமல் சார் அவரது நடிப்பைப் பற்றி சொல்லவே வேணாம்.
பல்வேறு பரிமாணங்கள். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து தன்னை வெளிப்படுத்துகிறார். இரண்டு பேருமே சேர்ந்துருக்காங்க. ரகுமான் சார் எல்லாரும் கிடைக்காதா என ஆசைப்பட்ட போது 2 ஆஸ்கர் விருது வாங்கிருக்காரு.
ஆக இந்த 3 பேருமே படத்தில் இருக்காங்க. அதுல பெரிய மன அழுத்தம் அவங்களுக்கே இருக்கு. போட்டி என்பது அவங்களுக்கு வேற ஒருத்தர் இல்ல. அவங்களுக்குப் போட்டி அவங்களே. 3 பேருமே நிரூபிச்சிட்டாங்க. அதை விட பெரிசா போகணும்னு உழைச்சிருக்காங்க.
இந்தப் படத்துக்கு சூட்டிங் போற மாதிரி எங்களுக்குத் தெரியல. பெரிய ஸ்டார், பெரிய டைரக்டர்னு தோரணையே இல்லை. அப்போது தான் நாங்க எந்த ஒரு ஏற்றத்தாழ்வும் இல்லாம வேலை செய்தோம். அது அற்புதமான நேரம். உங்களைப் போலவே நானும் ஒரு குழந்தை மாதிரி இந்தப் படத்துக்குக் காத்துக்கிட்டு இருக்கேன். போருக்குப் போற மாதிரி இருக்கு என்று தெரிவித்துள்ளார் நாசர்.
கமல் படங்கள் என்றாலே நாசர் தவறாமல் இடம்பிடிப்பார். நாயகன், தேவர் மகன், குருதிப்புனல், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி என பல படங்களைச் சொல்லலாம். அப்படித்தான் இந்தப் படத்திலும் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…