1949 ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தவர் நடிகர் ராஜேஷ். அவர் ஒரு தொடர்கதை படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 1979 ஆம் ஆண்டில் வெளியான கன்னி பருவத்திலே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் ராஜேஷ். டும் டும் டும், ராம், உள்ளம் கேட்குமே உள்ளிட்ட பல படங்களுக்கு டப்பிங் கலைஞராக பணியாற்றியுள்ளார்.
எழுத்தாளர் அவதாரமெடுத்து 9 புத்தகங்களை எழுதியுள்ளார் ராஜேஷ். கடைசியாக விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்துமஸ் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார் ராஜேஷ். யூடியூப்பில் பல பிரபலங்களை நேர்காணல் நடத்தி அவர்களுடான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். இவர் சினிமாவிற்கு வரும் போது சிவாஜியை விட நான்தான் நல்ல நடிகன் என்ற எண்ணத்துடன்தான் வந்தார்.
ஆனால் வந்த பிறகுதான் அவருக்கே தெரிந்திருக்கிறது. சிவாஜி எப்பேற்பட்ட நடிகர் என்று. நடிகர், எழுத்தாளர் என்பதையும் தாண்டி சிறந்த அறிவாளி ராஜேஷ். பேச்சிலும் எழுத்திலும் நேர்மையை பார்க்க முடியும். சினிமாவில் தெரியாத விஷயங்களே கிடையாது. மிகவும் நுணுக்கத்துடன் எதையும் கையாள்வார் ராஜேஷ். இந்த நிலையில் அவருடைய திடீர் மறைவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர் எஸ்விசேகர் ராஜேஷை பற்றி கூறும் போது நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள்தான். அவருடைய நிறைவேறாத ஆசை என்னவெனில் எப்படியாவது கமலை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் கடைசிவரை அது நடக்கவே இல்லை என்று எஸ்விசேகர் கூறினார்.
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…
நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…